சர்க்கரை நோயால் வாடிய சிறுவனுடன்… நண்பனும் சேர்ந்து தற்கொலை! நெஞ்சை உருக்கும் சோகம்!

Published:

diabets2 - 2026

சர்க்கரை நோயால் சிறுவன் வாடினான். அவனுக்காக நண்பன் சேர்ந்து உயிரை விட்டான். நேற்று சர்க்கரை நோய் தினத்தன்று இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

டயாபடிக் நோயால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன்… தினமும் மூன்று முறை இன்சுலின்! மருத்துவத்துக்கு ஏழு இலட்சம் ரூபாய்! உடல் நிலை சரியில்லாததால் பூச்சி மருந்து குடித்தான் சிறுவன்! மன வருத்தத்தால் அதே மருந்தை குடித்தான் அவனது நண்பன்! இருவரும் உயிரிழந்தனர்!

சர்க்கரைநோய் தினத்தன்று வெளிச்சத்துக்கு வந்த சோகம் இது. அந்த இரு சிறுவர்களும் உயிர் நண்பர்கள். படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மாட்டார்கள்.

பள்ளியிலிருந்து வந்த சிறுவன் ‘பன்னீ’ (11), “அம்மா! தயிர்சாதம் சாப்பிடணும் போல் இருக்கு” என்றான். தாய் தயிர் வாங்கி வர வெளியில் சென்றார். அதற்குள் நண்பனைப் பார்க்கும் ஆர்வத்தால் நண்பன் வீட்டிற்குச் சென்றான். அங்கே அந்த நண்பன் பாஸ்கர் (13), பூச்சி மருந்து குடித்துக் கொண்டிருப்பதை கண்டான். இவன் தடுத்துப் பார்த்தான்.

வாழ்நாள் பூராவும் நோயோடு போராட முடியாது. தினமும் மூன்று முறை ஊசி போட்டுக் கொள்கிறேன். நான் சாகப் போகிறேன் என்றான் பாஸ்கர். அப்படியானால் நானும் உன்னோடு வருகிறேன் என்றான் பன்னீ. இருவரும் சேர்ந்து பூச்சி மருந்து குடித்தனர்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
diabets1 - 2026

சிறுவயதிலேயே உடலை வருத்தும் சர்க்கரை நோயால் ஆரோக்கியம் குன்றி பெற்றோருக்குப் பாரமாகி விட்டேனே என்ற வருத்தத்தில் ஒரு சிறுவன் தற்கொலை செய்து கொண்டான். அந்த நண்பனைப் பிரிந்த வாழ்வு எதற்கு என்று மற்றொருவனும் தற்கொலை செய்து கொண்டான்.

உலக சர்க்கரை நோய் தினத்திற்கு ஒரு நாள் முன்பு தெலங்காணா சித்திபேட்டை மாவட்டத்தில் நடந்த இந்த பெரிய சோகம் நவம்பர் 14 புதன்கிழமை அற்று வெளிச்சத்துக்கு வந்தது.

‘மத்தூரு’ மண்டலம் ‘பிட்ட கூடேனி ‘யைச் சேர்ந்த பாஸ்கர் (13) லக்ஷ்மி, ரமேஷ் தம்பதிகளின் மூன்று பிள்ளைகளில் இரண்டாமவன். ஏழாவது படிக்கிறான். அருகிலேயே வசிக்கும் பன்னீ ( 11) ஷோபா, லக்ஷ்மண் தம்பதிகளின் மூத்த பிள்ளை. ஆறாம் வகுப்பு படிக்கிறான்.

பாஸ்கர் சிறுவயதிலிருந்தே சர்க்கரை நோயால் சிரமப் படுகிறான். அவனுடைய மருத்துவச் செலவுக்காக இதுவரை 7 லட்சம் வரை பெற்றோர் செலவு செய்துள்ளார்கள். மகனின் வைத்திய செலவுக்காக தந்தை வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

தயிர்சாதம் கேட்ட மகன் திரும்பி வராமல் போய்விட்டானே என்று அந்த தாய் அழுத சோகம் பார்ப்போர் நெஞ்சைக் கரைத்தது. இந்த சோகத்தை என்னவென்று சொல்வது?

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img