திடீர் கூட்டு அணி – என்ன நியாயம் சொல்கிறார்கள் இவர்கள்!?

Published:

fadnavis pawar1 - 2026

மகாராஷ்டிராவில் நிகழ்ந்த திடீர் அரசியல் திருப்பம் குறித்து பலரும் பலவிதமாகக் கூறும் போது, பட்நாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகிய இருவரும் தங்கள் தரப்பை நியாயப் படுத்தியிருக்கிறார்கள்.

மஹாராஷ்டிராவில், அஜித் பவார் கட்சி விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வரும் 30ஆம் தேதி மஹாராஷ்டிரா அரசு கவிழும் என்றார்.

மஹாராஷ்டிராவில் திடீரென நடைபெற்றுள்ள ஆட்சி அமைப்பு தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், மஹாராஷ்டிராவில் பாஜக., ஆட்சி அமைத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. பாஜக., ஆட்சிக்கு வந்தால் அஜித்பவாரை சிறையில் அடைப்போம் என்றார். ஆனால் பட்னவிஸ் தற்போது அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கி உள்ளார். இதில் இருந்து அஜித் பவார் மிரட்டப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. பெரும் பான்மையை நிரூபிக்க பாஜக.,வால் முடியாது என்றார்.

fadnavis pawar - 2026

இதனிடையே, மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியும் சிவசேனா ஒத்துழைக்க மறுத்தது. வேறு கட்சிகளுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயன்றதால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. மகாராஷ்டிராவிற்கு தேவை நிலையான ஆட்சி; கிச்சடி அரசல்ல – என்று கூறியுள்ளார் தேவேந்திர பட்நவிஸ் !

விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளதால் நிலையான ஆட்சி வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார் அஜித் பவார்.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img