ரயில் மாறி ஏறிய சிறுமி சீரழிக்கப்பட்ட அவலம்!

புது தில்லி:

ரயில் மாறி ஏறியதால், 15 வயது சிறுமி கடத்தி சீரழிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தனது உறவினர்களை பார்ப்பதற்காக ரயில் ஏறச் சென்றார். ஆனால், அவர் தவறுதலாக தில்லி செல்லும் ரயிலில் ஏறிவிட்டார். தில்லி சென்று அவர் இறங்கியதும், உதவிக்காக தண்ணீர் பாட்டீல் விற்கும், அர்மான் என்பவரை அணுகியுள்ளார். அந்த நபர், சிறுமியை ஏமாற்றி சராய் கலே கான் பகுதிக்கு அழைத்து சென்று, தனது மனைவி ஹசீனா உதவியுடன் பல முறை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர்கள், அந்தச் சிறுமியை, ரூ.70 ஆயிரத்திற்கு பப்பு யாதவ் என்பவரிடம் விற்பனை செய்துள்ளனர்.

சிறுமியை வாங்கிய பப்பு யாதவ், அவரைத் திருமணம் செய்து, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். சில நாட்களுக்கு பின் அங்கிருந்து தப்பிய, அந்தச் சிறுமி, ரயில் நிலையத்திற்கு வந்தார். மீண்டும் அங்கு அவரைப் பார்த்த ஹசீனா, மயக்கும் வகையில் பேசி மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அவருக்குக் கொடுத்தார். அதில் அந்தச் சிறுமி மயக்கமடைந்தார். பின்னர் அந்தச் சிறுமியை, 22 வயது இளைஞர் ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஹசீனா ஒப்படைத்தார். அந்த இளைஞரும் சிறுமியை ரயில் நிலையம் அருகேயே பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ஓடிச் சென்றார்.

மயக்கம் தெளிந்த சிறுமி, அங்கிருந்த பொது மக்கள் உதவியுடன் தப்பித்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர்கள், சராய்சலேகான் மற்றும் பரிதாபாத்தில் சோதனை நடத்தி, பப்புயாதவ் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். தப்பிச் சென்ற மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories