ரயில் மாறி ஏறிய சிறுமி சீரழிக்கப்பட்ட அவலம்!

புது தில்லி:

ரயில் மாறி ஏறியதால், 15 வயது சிறுமி கடத்தி சீரழிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தனது உறவினர்களை பார்ப்பதற்காக ரயில் ஏறச் சென்றார். ஆனால், அவர் தவறுதலாக தில்லி செல்லும் ரயிலில் ஏறிவிட்டார். தில்லி சென்று அவர் இறங்கியதும், உதவிக்காக தண்ணீர் பாட்டீல் விற்கும், அர்மான் என்பவரை அணுகியுள்ளார். அந்த நபர், சிறுமியை ஏமாற்றி சராய் கலே கான் பகுதிக்கு அழைத்து சென்று, தனது மனைவி ஹசீனா உதவியுடன் பல முறை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர்கள், அந்தச் சிறுமியை, ரூ.70 ஆயிரத்திற்கு பப்பு யாதவ் என்பவரிடம் விற்பனை செய்துள்ளனர்.

சிறுமியை வாங்கிய பப்பு யாதவ், அவரைத் திருமணம் செய்து, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். சில நாட்களுக்கு பின் அங்கிருந்து தப்பிய, அந்தச் சிறுமி, ரயில் நிலையத்திற்கு வந்தார். மீண்டும் அங்கு அவரைப் பார்த்த ஹசீனா, மயக்கும் வகையில் பேசி மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அவருக்குக் கொடுத்தார். அதில் அந்தச் சிறுமி மயக்கமடைந்தார். பின்னர் அந்தச் சிறுமியை, 22 வயது இளைஞர் ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஹசீனா ஒப்படைத்தார். அந்த இளைஞரும் சிறுமியை ரயில் நிலையம் அருகேயே பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ஓடிச் சென்றார்.

மயக்கம் தெளிந்த சிறுமி, அங்கிருந்த பொது மக்கள் உதவியுடன் தப்பித்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர்கள், சராய்சலேகான் மற்றும் பரிதாபாத்தில் சோதனை நடத்தி, பப்புயாதவ் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். தப்பிச் சென்ற மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories