spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஇலங்கையின் கட்டமைப்புக்கு இந்தியா நிதி உதவி: மோடி அறிவிப்பு!

இலங்கையின் கட்டமைப்புக்கு இந்தியா நிதி உதவி: மோடி அறிவிப்பு!

- Advertisement -

தில்லியில் பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது, ‘வணக்கம்’ என கூறி தனது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

இலங்கை தமிழர்களுக்கு சம நீதி, சம உரிமை வழங்கும் வகையிலான 13வது அரசியலமைப்பு சட்ட திருத்த‌த்தை அமல்படுத்த வேண்டும் என்று இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இலங்கையின் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்காக 400 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கப் படுவதாக பிரதமர் மோடி அப்போது தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை எதிர்க்க இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்கப் படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வலிமையான பிணைப்பு உள்ளது என்றும், இலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் மோடி அப்போது தெரிவித்தார்.

பின்னர் பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, இலங்கையில் சிறை பிடிக்கப் பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க உள்ளதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe