ஹைதராபாத் நகரில், படுகொலை செய்யப்பட்ட டாக்டர் பிரியங்கா ரெட்டியின் வீட்டிற்கு நேரில் சென்ற தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், துயரில் தவிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கொடூரமான சம்பவம் குறித்து ஆளுநர் தனது அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்! இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று அதனைக் குறிப்பிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன், இந்த வழக்கின் விசாரணை விரைவான பாதையில் செல்லும் என்பதையும், அது விரைந்து நீதிமன்றத்திற்கு அனுப்பப் படுவதையும், குற்றவாளிகள் கூடிய விரைவில் தண்டிக்கப்படுவதையும் உறுதி செய்தார்.
பெண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்ப்பதற்காக அரசு அமைப்பில் உள்ள குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு சரிசெய்யப்படும் என்று அவர் கூறினார்.
முன்னுரிமை அடிப்படையில் பொது மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று அவர் அப்போது குறிப்பிட்டார்.