மதுரையைச் சேர்ந்த இளைஞரால்… விக்ரம் லேண்டர் அகப்பட்டது! நாஸா தகவல்!

vikram lander shanmugasubrmanian - 2026

அந்த விக்ரம் லேண்டர் நாசாவின் கண்களில் பட்டது. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா அறிவித்துள்ளது. 

இந்தியா கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விக்ரம் லேண்டரை விண்ணுக்கு அனுப்பியது. ராக்கெட் சரியான பாதையில் சரியான தொலைவில் சென்ற நிலையில் இறுதிக் கட்டத்தில் செப்.7ஆம் தேதி நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறங்குவதற்கு 2 கி.மீ., தொலைவுக்கு முன்னதாக தகவல் தொடர்பை இழந்தது.

இது, இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. நீண்ட நாட்கள் முயற்சி செய்தும், விக்ரம் லேண்டருடனான தொடர்பை சரி செய்ய முடியவில்லை. இந்தியாவின் முயற்சிக்கு நாசாவும் உதவியாக இருந்து விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் இறங்கியது. இந்நிலையில், விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டறியப்பட்டதாக நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. 

இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான் – 2 சுமந்து சென்ற லேண்டாரின் உதிரி பாகங்களின் இருப்பிடத்தை கண்டறிய மதுரை பொறியாளரே உதவியுள்ளார்.

சந்திரயான் 2 விண்கலம் சுமந்து சென்ற விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டறிய மதுரையைச் சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்ரமணியன் கொடுத்த தகவலே காரணம் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது!

இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாசாவின் லுனார் ரிகனைஸ்ஸான்ஸ் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் தரையிறக்க திட்டமிடப்பட்ட இடத்தின் புகைப்படத்தை செப்டம்பர் 26ஆம் தேதி வெளியிட்டிருந்தோம். விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை கண்டறிவதற்காக பல ஆய்வாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேடியதாகவும், அதில் சண்முக சுப்ரமணியன் என்ற இந்திய பொறியாளர் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் குறித்து நாசாவிற்கு தெரியப்படுத்தினார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சண்முக சுப்பிரமணியன் அளித்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்டு அந்த இடத்தை ஆய்வு செய்தபோது, விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் என்று கூறப்பட்ட அந்த இடத்தில் அவை இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம் என தெரிவித்துள்ளனர்.

shanmugasubramanian madurai - 2026

விக்ரம் லேண்டாரின் உதிரி பாகங்களை புகைப்படமாக நாசா வெளியிட்டதோடு அதற்கு எஸ் என்ற பெயரையும் வைத்துள்ளது.

விக்ரம் லேண்டர் நிலவில் மெதுவான தரையிறங்கலை திட்டமிட்டு, ஆனால் எதிர்பாராத விதமாக வேகமான தரையிறங்கலால் நிலவின் தரைத்தளத்தில் மோதி சேதமடைந்த விக்ரம் லேண்டர் குறித்த தகவலை ஒரு தமிழர் கூறிய தகவல் தான் நாசா கண்டறியவும் உதவியாக இருக்கிறது!

NasaMail - 2026

சந்திரயான் 2 திட்டக் குழு இஸ்ரோவின் தலைவர் தமிழரான சிவன் தலைமையில் இயங்குகிறது. மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் அளித்த தகவலின் அடிப்படையில் தான் தற்போது அந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நாஸா, அவருக்கு மின்னஞ்சல் வாயிலாக செய்திகளை தெரிவித்து, அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

இதனை சண்முக சுப்ரமணியன் தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories