புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, விரைவில் வெளி உலகுக்கு தன்னைக் காட்டிக் கொள்வார். அவர் திரும்புவார், ஆனால் தனியாக அல்ல, தனது துணைவியுடன் என்று ஊடகங்களில் செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் சிறிது காலம் ஓய்வு எடுத்து ஒரு மாத காலத்துக்கும் மேலாக விடுப்பில் உள்ளார். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலை எவரும் வெளியிடவில்லை. இதனால், அவரை கண்டுபிடித்துத் தரும்படி பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஆனால், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வரும் ஏப்ரல் 19ம் தேதி புது தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் ராகுல் பங்கேற்பார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், விரைவில் தனது துணைவியுடன் தில்லி திரும்ப இருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ராகுல் விரைவில் திரும்புவார்; தனியாக அல்ல; துணைவியுடன்: ஊடகப் பரபரப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari