கள்ளத்தொடர்பு விவாகரத்துக்கான அடிப்படை; ஆனால் தண்டனைக்குரிய குற்றமில்லை!

06 July17 Supreme Court - 2026

புது தில்லி: கள்ளத் தொடர்பு, விவாகரத்துக்கான அடிப்படை அம்சமாக நீடிக்கிறது, ஆனால் தண்டனைக்கு உரிய குற்றம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 497ஆவது பிரிவின்படி, கள்ளத் தொடர்பு தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. இருப்பினும், கணவனின் ஒப்புதலுடன் நடைபெற்ற கள்ளத்தொடர்பு என்றால், அது தண்டனைக்குரிய குற்றமில்லை என்கிறது இந்தப் பிரிவு.

குற்றத்தினால் பாதிக்கப்படுபவர் பெண் என்பதாலும், இத்தகைய குற்றத்தை பெண் இழைப்பதில்லை என்ற அடிப்படையிலும் கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் இந்தப் பிரிவு, திருமணமான பெண்ணுக்கு தண்டனை தருவதில்லை.  இந்நிலையில் இந்த 497ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.நாரிமன், ஏ.எம்.கான்வில்க்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய ஐந்து நீதிபதீகள் அடங்கிய அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கின் விசாரணையில், ஐபிசி 497ஆவது பிரிவு நீடிக்க வேண்டும் என்றும், அது திருமண உறவின் புனிதத்தை பாதுகாக்கிறது என்றும் மத்திய அரசு வாதிட்டது. இந்திய சமூகத்தின் கட்டமைப்பு மற்றும் கலாச்சாரத்தை கருத்தில் கொண்டு, இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றும், கள்ளத் தொடர்பை குற்றம் இல்லை என்று ஆக்குவது திருமண பந்தத்தை பலவீனப்படுத்துவதாக அமைந்துவிடும் என்றும் மத்திய அரசு வாதிட்டது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இருப்பினும், விசாரணையின் போது பெண்ணின் கணவர் ஒப்புதலுடன் உறவு நடைபெற்றால், தண்டனைக்குரியது அல்ல என்று வரையறுக்கும் இந்தச் சட்டம் எப்படி புனிதத்தை பாதுகாக்கும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், 5 நீதிபதிகள் அமர்வு 4 தீர்ப்புகளை வாசித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும், நீதிபதி ஏ.எம்.கான்வில்க்கரும் எழுதிய தீர்ப்பு முதலில் வாசிக்கப்பட்டது. அடுத்து மற்ற 3 நீதிபதிகளும் தங்கள் கருத்துகளுடன் தீர்ப்புகளை எழுதினர்.

இருப்பினும் 5 நீதிபதிகளும், கள்ளத்தொடர்பு என்பது தண்டனைக்குரிய குற்றம் அல்ல என்ற தீர்ப்பை கருத்து ஒற்றுமையுடன் வழங்கினர்.

கணவர் என்பவர், மனைவியின் எஜமானர் இல்லை என்றும், பெண்ணின் சமத்துவம் மற்றும் கண்ணியத்துக்கு எதிரான எந்த சட்டப் பிரிவும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் தலைமை நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அதேநேரம் கள்ள உறவு என்பது விவாகரத்து செய்வதற்கான அடிப்படையாக நீடிக்கும் என்று 5 நீதிபதிகள் அமர்வு தெளிவுபடுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories