கள்ளத்தொடர்பு விவாகரத்துக்கான அடிப்படை; ஆனால் தண்டனைக்குரிய குற்றமில்லை!

06 July17 Supreme Court - 2026

புது தில்லி: கள்ளத் தொடர்பு, விவாகரத்துக்கான அடிப்படை அம்சமாக நீடிக்கிறது, ஆனால் தண்டனைக்கு உரிய குற்றம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 497ஆவது பிரிவின்படி, கள்ளத் தொடர்பு தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. இருப்பினும், கணவனின் ஒப்புதலுடன் நடைபெற்ற கள்ளத்தொடர்பு என்றால், அது தண்டனைக்குரிய குற்றமில்லை என்கிறது இந்தப் பிரிவு.

குற்றத்தினால் பாதிக்கப்படுபவர் பெண் என்பதாலும், இத்தகைய குற்றத்தை பெண் இழைப்பதில்லை என்ற அடிப்படையிலும் கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் இந்தப் பிரிவு, திருமணமான பெண்ணுக்கு தண்டனை தருவதில்லை.  இந்நிலையில் இந்த 497ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.நாரிமன், ஏ.எம்.கான்வில்க்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய ஐந்து நீதிபதீகள் அடங்கிய அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கின் விசாரணையில், ஐபிசி 497ஆவது பிரிவு நீடிக்க வேண்டும் என்றும், அது திருமண உறவின் புனிதத்தை பாதுகாக்கிறது என்றும் மத்திய அரசு வாதிட்டது. இந்திய சமூகத்தின் கட்டமைப்பு மற்றும் கலாச்சாரத்தை கருத்தில் கொண்டு, இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றும், கள்ளத் தொடர்பை குற்றம் இல்லை என்று ஆக்குவது திருமண பந்தத்தை பலவீனப்படுத்துவதாக அமைந்துவிடும் என்றும் மத்திய அரசு வாதிட்டது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

இருப்பினும், விசாரணையின் போது பெண்ணின் கணவர் ஒப்புதலுடன் உறவு நடைபெற்றால், தண்டனைக்குரியது அல்ல என்று வரையறுக்கும் இந்தச் சட்டம் எப்படி புனிதத்தை பாதுகாக்கும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், 5 நீதிபதிகள் அமர்வு 4 தீர்ப்புகளை வாசித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும், நீதிபதி ஏ.எம்.கான்வில்க்கரும் எழுதிய தீர்ப்பு முதலில் வாசிக்கப்பட்டது. அடுத்து மற்ற 3 நீதிபதிகளும் தங்கள் கருத்துகளுடன் தீர்ப்புகளை எழுதினர்.

இருப்பினும் 5 நீதிபதிகளும், கள்ளத்தொடர்பு என்பது தண்டனைக்குரிய குற்றம் அல்ல என்ற தீர்ப்பை கருத்து ஒற்றுமையுடன் வழங்கினர்.

கணவர் என்பவர், மனைவியின் எஜமானர் இல்லை என்றும், பெண்ணின் சமத்துவம் மற்றும் கண்ணியத்துக்கு எதிரான எந்த சட்டப் பிரிவும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் தலைமை நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அதேநேரம் கள்ள உறவு என்பது விவாகரத்து செய்வதற்கான அடிப்படையாக நீடிக்கும் என்று 5 நீதிபதிகள் அமர்வு தெளிவுபடுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories