spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாகிரிக்கெட் விளையாடணும்னு போய்... உயிரை இழந்த சிறுவர்கள்!

கிரிக்கெட் விளையாடணும்னு போய்… உயிரை இழந்த சிறுவர்கள்!

- Advertisement -

கிரிக்கெட் விளையாடுவதற்கு சென்று உயிர் இழந்த சிறுவர்கள்.ஹைதராபாதில் உப்பல் பகாயத் வென்ச்சர் அருகில் இந்த சோக நிகழ்வு நேர்ந்தது.

கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்ற இரு சிறுவர்கள் பில்டிங் கட்டுவதற்காக தோண்டிய செல்லார் குழியில் கவனிக்காமல் விழுந்து மரணமடைந்தார்கள். விடுமுறை தினங்களில் விளையாட்டாக கிரிக்கெட் ஆட்டத்திற்கு சென்ற இரு சிறுவர்களை சடலங்களாக மீட்கப் பட்டனர்.

ஹைதராபாத்தில் உப்பல் என்னுமிடத்தில் ஞாயிறன்று டிசம்பர் 29 மத்தியானம் இந்த சோக நிகழ்வு நேர்ந்தது. ரேவந்த் 12, சிண்ட்டு 11 என்ற இரு சிறுவர்கள் இன்னும் பிற சிறுவர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதற்காக பகாயத் வென்சர் அருகிலிருந்த மைதானத்திற்கு சென்றார்கள்.

சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகையில் பந்து அங்கிருந்த கட்டட நிர்மாணத்திற்காக தோண்டிய குழியில் விழுந்துள்ளது. அந்தப் பந்தைத் தேடிச் சென்ற இருவரும் குழியில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி இறந்து போனார்கள்.

விவரம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து, உடல்களை போஸ்ட் மார்ட்டத்திற்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சிறுவர்களின் மரணத்தால் பெற்றோரும் உற்றாரும் சோகத்தில் ஆழ்ந்தனர் . சம்பவம் குறித்து முழுமையான விசாரணையை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe