தலைவர் ஆனார் ஜே.பி.நட்டா! பாஜக.,வினர் வாழ்த்து!

jbnadda1 - 2026

பாஜக., செயல் தலைவராக இருந்து வந்த ஜே.பி. நட்டா, இன்று காலை பாஜக.,வின் தேசிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து இன்று அவர் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவருக்கு பாஜக.,வினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது, பாஜக.,வில் உட்கட்சித் தேர்தல்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த உட்கட்சித் தேர்தல்கள் தற்போது இறுதி வடிவத்தை அடைந்துள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கும், புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

தேசிய அளவில் தலைவர், பொதுச் செயலர் உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டு வருகின்றனர். இந்தப் பணிகளை கட்சியின் மூத்த தலைவர் ராதா மோகன்சிங் தலைமையிலான குழு மேற்பார்வையிட்டு வருகிறது.

jbnadda - 2026

திங்கள் கிழமை இன்று தில்லி பாஜக., தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் செயல் தலைவராக இருந்த ஜே.பி.நட்டா மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தார். வேறு எவரும் மனு தாக்கல் செய்ய வில்லை என்பதால், ஜே.பி.நட்டா கட்சியின் தேசியத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ஜே.பி. நட்டாவின் பெயரை, பாஜக., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாநில தலைவர்கள் வழிமொழிந்து மனுக்கள் தாக்கல் செய்தனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முன்னிலையில், ஒரு மனதாக தேசிய தலைவராக தேர்வு செய்யப் பட்டார் ஜே.பி.நட்டா! பின்னர் தற்போதைய தலைவர் அமித் ஷா அவரை தலைவர் பொறுப்பில் அமர வைத்தார். இதை அடுத்து இன்றே பாஜக., தேசியத் தலைவராக ஜேபி நட்டா பொறுப்பேற்று கட்சிப் பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார்.

jbnadda2 - 2026

இதை அடுத்து நட்டாவுக்கு பாஜக.,வினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களிலும் நட்டாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories