ஆம் ஆத்மி, பாஜக., காங். தேர்தல் ஆணையம்… எல்லோரும் ‘ஹேப்பி’!

aam adhmi arvind kejriwal - 2026

தில்லி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகின்றன. இந்த முடிவுகள் பல தரப்பையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது என்பதுதான் இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம். தில்லி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகின்றன. இந்த முடிவுகள் பல தரப்பையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது என்பதுதான் இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம். தில்லி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகின்றன. இந்த முடிவுகள் பல தரப்பையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது என்பதுதான் இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம்.

தில்லி சட்டப்பேரவை தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாமல் காணாமல் போன காங்கிரஸ் கட்சி, உண்மையில் வருத்தப் பட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அது மகிழ்ச்சியுடன் இருக்கிறது. தில்லியை ஆண்ட கட்சியான காங்கிரஸ் இப்போது ஆம் ஆத்மியிடம் ஆட்சியைப் பறிகொடுத்து விட்டாலும், ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியைக் கொண்டாடி வருகிறது.

aap 3 - 2026

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, இந்த வெற்றி முடிவுகள் பாஜகவின் வகுப்புவாத கொள்கைக்கு எதிராக மக்கள் தீர்ப்பு அளித்துள்ளதை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்தார். 3வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்! இந்த தேர்தலில் காங்கிரஸின் தோல்வி வருத்தத்திற்குரியது தான் என்றாலும், ஆம் ஆத்மியின் வெற்றி பாஜகவின் வகுப்புவாத கொள்கைக்கு எதிரானது என்று கூறி, தாங்கள் மகிழ்ச்சியுடன் இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்ப்பதாகக் கூறினார்.

தில்லியை ஆண்ட கட்சியான பாஜக., வெங்காய விலையால் ஆட்சி பறி போன பின்னர் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியாமல் தவிக்கிறது. இப்போதும் தோல்வியே என்றாலும், கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட கூடுதலாக இடங்கள் பெற்றும், வாக்கு சதவீதம் உயர்ந்தும் வருவது தங்களது செல்வாக்கு மீண்டும் வளர இடம் கொடுத்திருப்பதாக பாஜக., மகிழ்ச்சி அடைந்துள்ளது.

election commission - 2026

எந்த வித அரசியல் பின்புலமும் இல்லாமல் வெறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், நாடகங்கள், அரசியல் ஸ்டண்டுகள் மூலமாகவே கட்சியைத் தொடங்கி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து, சாதனை படைத்ததில், ஆம் ஆத்மி கட்சி மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த மூன்று தரப்பும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது சரிதான்… ஆனால் தேர்தல் ஆணையமும் இப்போது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். காரணம், துடைப்பக்கட்டை சின்னத்தை வாக்குப் பதிவு இயந்திரங்களில் காணாமல் போக்கி, கோல்மால் செய்து, எங்கள் வெற்றியைப் பறித்து விட்டார்கள் என்று, வாக்குப் பதிவு இயந்திரங்களைக் குறை சொல்லி, ஆம் ஆத்மி இப்போது போராடாது என்பதுதான்! ஏற்கெனவே அதற்காகத்தான் அரவிந்த் கேஜ்ரிவால் டிவிட்டர் பதிவில் தேர்தல் ஆணையத்தை சந்தேகித்து கருத்துப் போட்டு, முன்னதாகவே துண்டு போட்டு விட்டார். இப்போது அந்த அவச்சொல்லில் இருந்து தப்பித்து விட்டதற்காக தேர்தல் ஆணையமும் இந்தத் தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சி அடைந்திருக்கும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories