ஹிந்துக்களிடம் அக்பருதீன் ஓவைசி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜாசிங்!

Published:

owaisi - 2026

பாத்தபஸ்தி லால்தர்வாஜா ஸ்ரீமகாகாளியம்மன் கோயிலை சீரமைப்பு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கேசிஆரிடம் எம்ஐஎம் தலைவர் அக்பருதீன் ஒவைசி கோரிக்கை மனு அளித்ததை பிஜேபி எம்எல்ஏ கண்டித்துள்ளார்.

இந்து ஆலயங்களின் வளர்ச்சி பற்றி பேசும் உரிமை எம்ஐஎம் தலைவர்களுக்கு இல்லை என்று பிஜேபி தலைவர் கோஷா மஹால் எம்எல்ஏ ராஜாசிங் கோபமடைந்துள்ளார். பாத்த பஸ்தியிலுள்ள லால் தர்வாஜா மகாகாளி கோவிலை எவ்வாறு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என்று விமர்சித்தார்.

முதல்வரின் திட்டப்படியே அக்பருதீன் ஒவைசி பிரகதி பவனுக்குச் சென்றார் என்று அவர் குற்றம் சாட்டினார். ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்ட ராஜாசிங் டிஆர்எஸ், எம்ஐஎம் கட்சிகளின் மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். ஹிந்துக்களின் எதிர்ப்பாளராக தம் மீது விழுந்துள்ள கறையைத் துடைப்பதற்காக மஜ்லிஸ் கட்சித் தலைவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று ராஜாசிங் ஏளனம் செய்தார்.

இதற்கு முன் இந்துக்களையும் பசுக்களையும் முன்வைத்து செய்த விமர்சனங்களுக்கு முதலில் மன்னிப்பு கேட்டு விட்டு அதன் பிறகு இந்து கோவில்களின் வளர்ச்சிப் பணிகள் பற்றி அக்பருதீன் பேசலாம் என்று ராஜாசிங் விமரிசனம் செய்தார் .

கேசிஆர், எம்ஐஎம் கட்சிக்கு மட்டுமின்றி மாநிலத்திற்கு கூட முதல்வராக நடந்து கொள்ள வேண்டுமென்று ராஜாசிங் கேலி செய்து விமர்சித்தார். முதல்வரை சந்திப்பதற்கு தனக்கு மட்டும் நேரம் கொடுப்பதில்லை என்றும் எம்ஐஎம் தலைவர்களுக்கு மட்டும் கேட்காமலேயே நேரம் ஒதுக்குகிறார் என்றும் குற்றம் சாட்டினார். தொகுதிப் பிரச்சனைகளை கூறுவதற்கு முயற்சித்தால் சந்திப்பதற்கு வாய்ப்பு கொடுப்பது இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 9 பிரகதி பவனில் முதல்வரை சந்தித்த எம்ஐஎம் எம்எல்ஏ அக்பருதீன் ஒவைசி பாத்த பஸ்தியில் உள்ள மகா காளி கோவில் ஆலயத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று விண்ணப்பப் பத்திரம் சமர்ப்பித்தார்.
ரூ 10 கோடியில் ஆலயத்தை சீரமைக்க வேண்டும் என்று அவர் கோரினார்.

மஜ்லிஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் முதல்வர் கேசிஆரை ஹிந்து கோவில் வளர்ச்சிப்பணிக்காகவும் மசூதி வளர்ச்சிப் பணிக்காகவும் சந்தித்ததும் உடனடியாக முதல்வர் அவற்றுக்கு நிதி ஒதுக்கியதும் விவாதத்திற்குரிய அம்சமாக மாறியது.

முஸ்லிம்களுக்காக போராடும் எம்ஐஎம் இந்துக்களின் பிரச்சினைகளை முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் செல்வதன் பின்னாலுள்ள காரணம் வேறு ஏதோ இருக்கிறது என்று பலரும் விமர்சன மழையைக் குவித்தனர்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img