December 6, 2025, 5:52 AM
24.9 C
Chennai

கொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி! ஏன் தெரியுமா?

IMG 20200214 WA0007 - 2025

வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.

வேறொரு பெண்ணோடு தகாத உறவு கொண்டுள்ளார் என்று கணவனோடு அடிக்கடி சண்டையிட்டு வந்த மனைவி ஞாயிறு அன்று காலை 7 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த கணவன்மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றி விட்டு ஓடிப்போனார்.

IMG 20200214 WA0008 - 2025

தன்னை கண்டுகொள்ளாமல் வேறொரு பெண்ணோடு தகாத உறவு கொண்டுள்ள கணவனை மனைவி இப்படி பழி வாங்கினாள்.

கொதிக்கும் எண்ணெயை கணவன் மீது ஊற்றிவிட்டு இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஓடிப்போனார். இந்த சம்பவம் கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெங்களூருவில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்த மஞ்சுநாதுக்கு (40) ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பத்மா (36) என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். தற்போது அவர்கள் யெஸ்வந்த்பூரில் உள்ள மோகன்குமார் நகரில் வசித்து வருகிறார்கள்.

IMG 20200214 WA0006 - 2025

ஆனால் மஞ்சுநாதிற்கு வேறொரு பெண்ணோடு தகாத உறவு உள்ளது என்று சந்தேகித்த மனைவி அடிக்கடி கணவரை அது பற்றி வினவி வந்துள்ளார் .இது விஷயம் குறித்து தம்பதிகளிடையே சில நாட்களாக தகராறு நடந்து வந்தது. சனிக்கிழமை கூட அவர்கள் இருவர் இடையே வாக்குவாதம் முற்றியது. ஞாயிறன்று காலை ஏழு மணி அளவில் சமையலுக்கு உபயோகிக்கும் எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றி புகை வந்து நன்றாக பொங்கும் வரை காய்ச்சி பெட்ரூமில் தூங்கிக்கொண்டிருந்த கணவர் மீது ஊற்றிவிட்டு கடுமையான காயங்களோடு அவர் துடிக்கையில் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஓடிப்போனார்.

மஞ்சுநாத் வீட்டுக்கு வெளியே ஓடி வந்து கூச்சல் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். முகம், தோள், நெஞ்சு பகுதிகளில் சுமார் 50 சதவிகிதம் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். மஞ்சுநாத் உயிருக்கு அபாயம் இல்லை என்றும் ஆனால் குணமாவதற்கு நிறைய காலம் பிடிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவரிடம் இருந்து புகார் பெற்று போலீசார் பத்மாவிற்காக தேடி அவரை கைது செய்தார்கள்.

முக்கால் லிட்டர் எண்ணையை காய்ச்சி ஊற்றியதாகவும் அது கோல்ட் வின்னர் எண்ணெய் என்றும் போலீசாரிடம் அவர் விவரித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories