கொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி! ஏன் தெரியுமா?

IMG 20200214 WA0007 - 2026

வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.

வேறொரு பெண்ணோடு தகாத உறவு கொண்டுள்ளார் என்று கணவனோடு அடிக்கடி சண்டையிட்டு வந்த மனைவி ஞாயிறு அன்று காலை 7 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த கணவன்மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றி விட்டு ஓடிப்போனார்.

IMG 20200214 WA0008 - 2026

தன்னை கண்டுகொள்ளாமல் வேறொரு பெண்ணோடு தகாத உறவு கொண்டுள்ள கணவனை மனைவி இப்படி பழி வாங்கினாள்.

கொதிக்கும் எண்ணெயை கணவன் மீது ஊற்றிவிட்டு இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஓடிப்போனார். இந்த சம்பவம் கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெங்களூருவில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்த மஞ்சுநாதுக்கு (40) ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பத்மா (36) என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். தற்போது அவர்கள் யெஸ்வந்த்பூரில் உள்ள மோகன்குமார் நகரில் வசித்து வருகிறார்கள்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு
IMG 20200214 WA0006 - 2026

ஆனால் மஞ்சுநாதிற்கு வேறொரு பெண்ணோடு தகாத உறவு உள்ளது என்று சந்தேகித்த மனைவி அடிக்கடி கணவரை அது பற்றி வினவி வந்துள்ளார் .இது விஷயம் குறித்து தம்பதிகளிடையே சில நாட்களாக தகராறு நடந்து வந்தது. சனிக்கிழமை கூட அவர்கள் இருவர் இடையே வாக்குவாதம் முற்றியது. ஞாயிறன்று காலை ஏழு மணி அளவில் சமையலுக்கு உபயோகிக்கும் எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றி புகை வந்து நன்றாக பொங்கும் வரை காய்ச்சி பெட்ரூமில் தூங்கிக்கொண்டிருந்த கணவர் மீது ஊற்றிவிட்டு கடுமையான காயங்களோடு அவர் துடிக்கையில் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஓடிப்போனார்.

மஞ்சுநாத் வீட்டுக்கு வெளியே ஓடி வந்து கூச்சல் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். முகம், தோள், நெஞ்சு பகுதிகளில் சுமார் 50 சதவிகிதம் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். மஞ்சுநாத் உயிருக்கு அபாயம் இல்லை என்றும் ஆனால் குணமாவதற்கு நிறைய காலம் பிடிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவரிடம் இருந்து புகார் பெற்று போலீசார் பத்மாவிற்காக தேடி அவரை கைது செய்தார்கள்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

முக்கால் லிட்டர் எண்ணையை காய்ச்சி ஊற்றியதாகவும் அது கோல்ட் வின்னர் எண்ணெய் என்றும் போலீசாரிடம் அவர் விவரித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories