இஸ்லாமிய கும்பல் ரவுடியிஸம்; மனைவிக்கு உட்கார இடம் கேட்டு கெஞ்சிய கணவன் அடித்துக் கொலை!

train - 2026

கைக்குழந்தையுடன் தன் மனைவி சிரமப்பட்ட போது, அதைக் கண்டு சகியாமல், ரயிலில் சற்று நகர்ந்து கொண்டு தன் மனைவிக்கு கொஞ்சம் இடம் கொடுக்குமாறு கெஞ்சிய கணவன், இஸ்லாமிய கும்பல் ரவுடிகளால் அடித்தே கொலை செய்யப் பட்டுள்ளார். கும்பலாக சேர்ந்தால், அடுத்தவர் சிரமப் படுவதைக் கண்டு மனம் இரங்கி உதவி செய்யாமல் போவது மட்டுமல்ல, வன்முறையைக் கையில் எடுத்து அடித்தே கொல்வார்கள் என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

மும்பை-லாதூர்-பிதர் எக்ஸ்பிரஸில் வியாழக்கிழமை ஓர் இருக்கை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 26 வயது இளைஞரை இஸ்லாமிய பெண்கள் ஆறு பேர் உள்பட 12 பேர் அடித்தே கொலை செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் புனே மற்றும் டவுண்ட் ரயில் நிலையங்களுக்கு இடையே வியாழக்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நடந்ததாக ஜிஆர்பி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்ட சாகர் மார்க்காட், அவரது மனைவி ஜோதி, அவரது தாய் மற்றும் இரண்டு வயது மகள் ஆகியோர் புனே நிலையத்திலிருந்து ரயிலின் பொதுப் பெட்டியில் அதிகாலை 12.45 மணி அளவில் ஏறினர்.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!
muslim mobbism - 2026

“கொல்லப்பட்டவரின் மனைவி பதிவு செய்த புகாரின் படி, அந்தப் பெட்டியின் இருக்கைகள் நிரம்பியிருந்தன. அமர்வதற்கு ஒரு சீட் கூட காலியாக இல்லை. அப்போது சாகர் மார்க்காட் பர்தா அணிந்திருந்த ஒரு பெண் பயணியிடம், கொஞ்சம் நகர்ந்து கொண்டு அமர்ந்து சிறிதளவு இடம் கொடுத்தால், கைக்குழந்தையுடன் நின்று கொண்டு சிரமப்படும் தன் மனைவி அமர்வதற்கு அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால் அந்தப் பெண் மற்றும் உடன் வந்த மேலும் ஐந்து பெண்கள், சாகர் மார்காடை வாயில் வந்த மொழியில் எல்லாம் திட்டித் தீர்த்தனர். வார்த்தை துஷ்பிரயோகம் செய்து அவமரியாதை செய்யத் தொடங்கினர். கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஆறு பெண்கள் உட்பட 12 பேர் சாகர் மார்க்காட்டை அடித்து உதைத்துள்ளனர் என்று அந்த ரயில்வே அதிகாரி கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்க முயன்றபோது, ​​அவர்கள் மனம் திரும்பவில்லை, ரயில் டவுண்ட்டை அடையும் வரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாகர் மார்க்காட்டை கொடூரமாகத் தாக்கியபடியே வந்துள்ளனர்… என்று அவர் மேலும் கூறினார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

டவுண்ட் நிலையத்தில், காவல்துறையினர் சாகர் மார்க்காட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு இஸ்லாமிய கும்பல் தாக்குதலில் உயிரிழந்தவரும் அவரது குடும்பத்தினரும், கல்யாணில் வசிப்பவர்கள். அனைவரும் உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள குர்திவாடிக்கு சென்று கொண்டிருந்தனர். இதை அடுத்து, கும்பலாக ஒரு மனிதரைக் கொன்ற 6 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் மீது, பிரிவு 302 (கொலை) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அதிகாரி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories