June 14, 2025, 8:26 PM
32.4 C
Chennai

ஆண்ட்ராய்டு போன் பயனாளருக்கு கூகுள் தரும் பயன்!

apps

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் எந்த விதமான ஆப்ஸ்கள் டவுன்லோட் செய்தாலும், அந்த ஆப்ஸ்-களை இன்ஸ்டால் செய்வதற்கு முன் உங்கள் கேலரி, எஸ்.எம்.எஸ் மற்றும் கால்ஸ் போன்ற சேவைகளை அணுகுவதற்கான அனுமதியை ஆப்ஸ்கள் கேட்டு வந்தன.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் எந்த விதமான ஆப்ஸ்கள் டவுன்லோட் செய்தாலும், அந்த ஆப்ஸ்-களை இன்ஸ்டால் செய்வதற்கு முன் உங்கள் கேலரி, எஸ்.எம்.எஸ் மற்றும் கால்ஸ் போன்ற சேவைகளை அணுகுவதற்கான அனுமதியை ஆப்ஸ்கள் கேட்டு வந்தன. இனி அந்த அணுகலை நீங்கள் வழங்க வேண்டாம், அதற்கான தீர்வை கூகிள் தற்பொழுது செய்துள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில், ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்வதற்கு முன் உங்கள் கேலரி, எஸ்.எம்.எஸ் மற்றும் கால்ஸ் போன்ற சேவைகளின் தரவை அணுக, அந்த பயன்பாடுகள் அனுமதியை கேட்கும். இது பாதுகாப்பானது இல்லை என்று கருதப்பட்டது. இதை உணர்ந்த கூகிள் இப்போது உங்கள் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் தரவைக் கேட்கும் பயன்பாடுகளின் எண்ணிக்கையைப் பெருமளவு குறைத்துள்ளது.

app

கூகிள் நிறுவனத்தின் புதிய கொள்கை என்ன செய்தது?
உண்மையில், கூகிள் நிறுவனம் ஸ்மார்ட்போனின் தரவை பாதுகாக்க மற்றும் தேவையற்ற அணுகலை தடைசெய்ய 2018ம் ஆண்டு கொள்கை ஒன்றைச் செயல்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டில் அழைப்பு பதிவு மற்றும் எஸ்எம்எஸ் தரவை அணுகும் பிளே ஸ்டோர் பயன்பாடுகளின் எண்ணிக்கை 98 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூகிள் அறிவித்துள்ளது.

மிச்சம் உள்ள 2% பயன்பாடுகளுக்கு என்ன ஆனது?
டெவலப்பர்கள் தங்கள் பயன்பாடுகளைப் புதுப்பிக்கவும், பயனர்களைப் பாதுகாக்கவும் கூகிள் உடன் கூட்டுசேர்ந்ததால், எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு பதிவு தரவை அணுகும் பயன்பாடுகளில் 98% குறைவு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 2% பயன்பாடுகள், அவற்றின் முக்கிய செயல்பாட்டைச் செய்ய எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு பதிவு தரவு தேவைப்படும் என்பதால் மட்டும் அணுக்களுக்கான அனுமதியுடன் செயல்படுகிறது.

apps 1

கூகிள் பிளே ஆண்ட்ராய்டு பயன்பாட்டு பாதுகாப்பு
கூகிள், சுமார் 790,000 க்கும் மேற்பட்ட கொள்கை மீறும் மோசமான மற்றும் தீங்கிழைக்கும் பயன்பாடுகளைத் தனது அதிகாரப்பூர்வ இடுகையிலிருந்து நீக்கம் செய்துள்ளது. அவற்றை பிளே ஸ்டோரில் வெளியிடப்படுவதைத் தடுக்கவும் பல முயற்சிகளை கடைப்பிடித்து நடைமுறைப்படுத்தியுள்ளது என்று கூகிள் பிளே பிளஸ் ஆண்ட்ராய்டு பயன்பாட்டு பாதுகாப்பின் தயாரிப்பு மேலாளர் ஆண்ட்ரூ அஹ்ன் கூறியுள்ளார்.

100 பில்லியினுக்கும் அதிகமான பயன்பாடுகளை ஸ்கேன்
ஆண்ட்ராய்டு தீம்பொருள் பாதுகாப்பு அம்சமான கூகிள் பிளே ப்ரொடெக்ட் அம்சத்தைப் பற்றியும் நிறுவனம் சில தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாகக் கூகிள் பிளே ப்ரொடெக்ட் ஒவ்வொரு நாளும் 100 பில்லியினுக்கும் அதிகமான பயன்பாடுகளை ஸ்கேன் செய்கிறது மற்றும் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்ட எந்தவொரு பயன்பாடுகளிலும் ஏதேனும் பாதுகாப்பு சிக்கல்களைக் கண்டறிந்தால் பயனர்களுக்கு ஒரு அறிவிப்பை அனுப்புகிறது.

கூகிள் பிளே அல்லாத சர்வர்கள் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட அல்லது வெளிவந்த சுமார் 1.9 பில்லியினுக்கும் அதிகமான தீம்பொருள் பயன்பாடுகளில் நிறுவல்களை, இது உங்கள் ஸ்மார்ட்போனிற்கு தீங்கு விளைவிக்கும் என்ற நோட்டிபிகேஷன் மெசேஜ்ஜையும் பிளே ப்ரொடெக்ட் சூட் தனது பயனர்களுக்கு அனுப்பி அவர்களுக்கான எச்சரிக்கை தகவலையும் அனுப்பியுள்ளது என்று கூகிள் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

சம்பளம் வழங்கக் கோரி மதுரை பல்கலை., பணியாளர்கள் போராட்டம்!

ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு

போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது!

விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.

Topics

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

சம்பளம் வழங்கக் கோரி மதுரை பல்கலை., பணியாளர்கள் போராட்டம்!

ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு

போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது!

விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

அகமதபாதில் விமானம் விழுந்து பயங்கர விபத்து!

அமித் ஷா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல உத்தரவிட்டார்.

பெண்களை ‘ஓஸி’ என கேலி பேசும் திமுக.,வினர் இனி வெட்டியாக வீட்டில் அமர்வார்கள்!

வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

Entertainment News

Popular Categories