கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய விளையாட்டு வீரர்களை பாராட்டிய பிரதமர்!

modi meeting - 2026

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் விளையாட்டு நட்சத்திரங்களுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது.

இதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்படுகிறது. இதுகுறித்து இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் மக்களிடம் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

narendra modi - 2026

இவர்களை பாராட்டும் வகையில் நேற்று பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பெரன்சிங்’ வழியில் உரையாடினார். இந்திய கிரிக்கெட் அணி ‘சீனியர்’ தோனி, கேப்டன் கோஹ்லி, ஓய்வு பெற்ற ‘ஜாம்பவான்’ சச்சின், இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் கங்குலி, தமிழகத்தின் ஆனந்த் (செஸ்), சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), மேரி கோம் (குத்துச்சண்டை), சிந்து (பாட்மின்டன்), ஹிமா தாஸ் (தடகளம்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), மனு பாகர் (துப்பாக்கிசுடுதல்) உள்ளிட்ட 49 நட்சத்திரங்கள் மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு பங்கேற்றனர்.

modi sindhu - 2026

நேரமின்மை காரணமாக 12 பேருக்கு மட்டும் பேச வாய்ப்பு தரப்பட்டது.
நேரமின்மை காரணமாக 12 பேருக்கு மட்டும் பேச வாய்ப்பு தரப்பட்டது. ஒவ்வொரு வரும் தலா 3 நிமிடம் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். சுமார் ஒருமணி நேரம் நடந்த இந்த உரையாடலில், தேசத்துக்கு பெருமை சேர்த்த அனைவரையும் பாராட்டினார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் தேசத்தின் மன உறுதியை அதிகரிக்கும் செயலில் விளையாட்டு நட்சத்திரங்களான நீங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றீர்கள். மக்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அடுத்தடுத்து செய்திகள் வெளியிடுகின்றீர்கள்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!
modi - 2026

சவால்களை எதிர்கொள்ளும் திறமை, சுய ஒழுக்கம், நேர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை என விளையாட்டு பயிற்சியில் கற்றுக் கொண்ட பண்புகள் இன்று கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதற்கான முக்கிய கருவிகளாக உங்களுக்கு உள்ளன.

தற்போது நீங்கள் தெரிவித்த பரிந்துரைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். ஒட்டுமொத்த இந்திய அணியாக இணைந்து கொரோனாவை எதிர்த்து போராடுகிறோம். நீங்கள் தரும் உற்சாகத்தால் இந்தியா விரைவில் புத்துயிர் பெறும் என நம்புகிறேன்.

  • தொற்று நோயை எதிர்த்து போராடுவது.
  • சமூக விலகலை பின்பற்றுவது.
  • நேர்மறையான எண்ணங்கள்.
  • கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் போர்க்களத்தில் முன்னணியில் உள்ள மருத்துவம், காவல்துறையினருக்கு மரியாதை தருவது.
  • தனிப்பட்ட, தேசிய அளவில் பிரதமர் நிதிக்கு பங்களிப்பு தருவது.

என ஐந்து முக்கிய தகவல்களை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ், மோடியிடம் கூறுகையில்,”மக்கள் ஊரடங்கை சரியாக பின்பற்றுவதில்லை. டாக்டர்கள் மற்றும் போலீசார் மீது மக்கள் கல்லெறிந்து விரட்டுவது வருத்தம் தருகிறது,” என்றார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

இந்திய கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சின் கூறுகையில்,”ஊரடங்கு நேரத்தில் எப்படி நாம் நடந்து கொள்கிறோம் என்பது மிக முக்கியம். இது இக்கட்டான நேரம். இனிமேல் முடிந்த வரை கைகுலுக்குவதற்குப் பதில், இரு கை கூப்பி வணங்க வேண்டும். நான் இதைத் தான் பின்பற்றுகிறேன். வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்த பிறகும் இதைத் தொடர வேண்டும்,” என்றார்.

இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் அஜய் தாகூர் கூறுகையில்,”கொரோனா வைரசால் உலகின் பல நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் இதில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். ஊரடங்கை கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்,” என்றார்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories