December 6, 2025, 10:52 AM
26.8 C
Chennai

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய விளையாட்டு வீரர்களை பாராட்டிய பிரதமர்!

modi meeting - 2025

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் விளையாட்டு நட்சத்திரங்களுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது.

இதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்படுகிறது. இதுகுறித்து இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் மக்களிடம் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

narendra modi - 2025

இவர்களை பாராட்டும் வகையில் நேற்று பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பெரன்சிங்’ வழியில் உரையாடினார். இந்திய கிரிக்கெட் அணி ‘சீனியர்’ தோனி, கேப்டன் கோஹ்லி, ஓய்வு பெற்ற ‘ஜாம்பவான்’ சச்சின், இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் கங்குலி, தமிழகத்தின் ஆனந்த் (செஸ்), சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), மேரி கோம் (குத்துச்சண்டை), சிந்து (பாட்மின்டன்), ஹிமா தாஸ் (தடகளம்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), மனு பாகர் (துப்பாக்கிசுடுதல்) உள்ளிட்ட 49 நட்சத்திரங்கள் மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு பங்கேற்றனர்.

modi sindhu - 2025

நேரமின்மை காரணமாக 12 பேருக்கு மட்டும் பேச வாய்ப்பு தரப்பட்டது.
நேரமின்மை காரணமாக 12 பேருக்கு மட்டும் பேச வாய்ப்பு தரப்பட்டது. ஒவ்வொரு வரும் தலா 3 நிமிடம் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். சுமார் ஒருமணி நேரம் நடந்த இந்த உரையாடலில், தேசத்துக்கு பெருமை சேர்த்த அனைவரையும் பாராட்டினார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் தேசத்தின் மன உறுதியை அதிகரிக்கும் செயலில் விளையாட்டு நட்சத்திரங்களான நீங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றீர்கள். மக்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அடுத்தடுத்து செய்திகள் வெளியிடுகின்றீர்கள்.

modi - 2025

சவால்களை எதிர்கொள்ளும் திறமை, சுய ஒழுக்கம், நேர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை என விளையாட்டு பயிற்சியில் கற்றுக் கொண்ட பண்புகள் இன்று கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதற்கான முக்கிய கருவிகளாக உங்களுக்கு உள்ளன.

தற்போது நீங்கள் தெரிவித்த பரிந்துரைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். ஒட்டுமொத்த இந்திய அணியாக இணைந்து கொரோனாவை எதிர்த்து போராடுகிறோம். நீங்கள் தரும் உற்சாகத்தால் இந்தியா விரைவில் புத்துயிர் பெறும் என நம்புகிறேன்.

  • தொற்று நோயை எதிர்த்து போராடுவது.
  • சமூக விலகலை பின்பற்றுவது.
  • நேர்மறையான எண்ணங்கள்.
  • கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் போர்க்களத்தில் முன்னணியில் உள்ள மருத்துவம், காவல்துறையினருக்கு மரியாதை தருவது.
  • தனிப்பட்ட, தேசிய அளவில் பிரதமர் நிதிக்கு பங்களிப்பு தருவது.

என ஐந்து முக்கிய தகவல்களை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ், மோடியிடம் கூறுகையில்,”மக்கள் ஊரடங்கை சரியாக பின்பற்றுவதில்லை. டாக்டர்கள் மற்றும் போலீசார் மீது மக்கள் கல்லெறிந்து விரட்டுவது வருத்தம் தருகிறது,” என்றார்.

இந்திய கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சின் கூறுகையில்,”ஊரடங்கு நேரத்தில் எப்படி நாம் நடந்து கொள்கிறோம் என்பது மிக முக்கியம். இது இக்கட்டான நேரம். இனிமேல் முடிந்த வரை கைகுலுக்குவதற்குப் பதில், இரு கை கூப்பி வணங்க வேண்டும். நான் இதைத் தான் பின்பற்றுகிறேன். வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்த பிறகும் இதைத் தொடர வேண்டும்,” என்றார்.

இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் அஜய் தாகூர் கூறுகையில்,”கொரோனா வைரசால் உலகின் பல நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் இதில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். ஊரடங்கை கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories