December 5, 2025, 8:42 PM
26.7 C
Chennai

ஹைதராபாத் மௌலாஅலி பகுதியில் கொடூரம்; போலீஸாரை தாக்கிய முஸ்லிம் பெண்!

police man attacked - 2025

ஹைதராபாத்: தெலங்காணா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கும் நிலையில், அரசின் உத்தரவை மீறி பைக்கி்ல் வந்தவர்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறை அதிகாரியின் சட்டையைப் பிடித்து ஒரு முஸ்லிம் பெண் தகராறு செய்த வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி, கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில் தெலங்காணா மாநிலம் ஹைதராபாத் மௌலாஅலி பகுதியில் லாலாபட் சோதனைச்சாவடி அருகே போலீஸார் நின்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரே பைக்கில் ஒரு பெண் தனது மகன், மற்றொருவர் என மூன்று பேராக வந்த நிலையில், அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தெலங்காணா மாநிலத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ், ஊரடங்கை மீறி தேவையற்ற விதத்தில் வெளியில் சுற்றுபவர்களை கண்டதும் சுடலாம் என்ற ரீதியில் கூறியிருக்கும் சூழலில், போலீஸார் அவர்களைத் தடுத்தி நிறுத்தி, கேள்வி கேட்டதுடன், ஊடரங்கை மீறியதற்காக வழக்குப் பதிவு செய்து, அபராதம் வசூலித்ததுடன், பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

hyderabad lady fighting police - 2025

இதனால் ஆத்திரமடைந்த பைக்கில் வந்த இஸ்லாமியப் பெண்மணி, அப்போது பணியில் இருந்த காவல் அதிகாரியின் சட்டையைப் பிடித்து இழுத்து, கண்டபடி திட்டி கூச்சல் போட்டு, அவருடன் தகராறில் ஈடுபட்டார்.

சக போலீஸ்காரர்கள் உடன் இருக்க, இவ்வாறு காவல் அதிகாரியின் சட்டையைப் பிடித்து ஒரு பெண்மணி கண்டபடி திட்டுவது குறித்த வீடியோ காட்சி தற்போது சமூகத் தளங்களில் வைரலாகி, கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories