December 5, 2025, 4:15 PM
27.9 C
Chennai

கொரோனா: ஒரே நாளில் 300 பேர் பாதிப்பு! இந்தியாவில் 2902 ஆக அதிகரிப்பு!

corono 1 - 2025

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், எண்ணிக்கை 2 ஆயிரத்து 902 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 68 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 2 ஆயிரத்து 650 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 183 பேர் குணமடைந்தும் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட விவரங்கள்:

”கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் ஒரே நாளில் 6 பேர் அதிகரித்துள்ளனர். மகாராஷ்டிராவில் 3 பேர், தில்லியில் இருவர், குஜாராத்தில் ஒருவர் இறந்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

corono 1 1 - 2025

அதைத் தொடர்ந்து குஜராத்தில் 9 பேரும், தெலங்கானாவில் 7 பேரும், மத்தியப் பிரதேசம், தில்லியில் தலா 6 பேரும், பஞ்சாப்பில் 5 பேரும், கர்நாடகா, மேற்கு வங்கத்தில் தலா 3 பேரும், ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம், கேரளாவில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர். ஆந்திரா, தமிழகம், பிஹார், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக கொரோனாவுக்கு 2,902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 பேர் வெளிநாட்டினர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 423 பேரும், தமிழகத்தில் 411 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தில்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 386 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 295 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில் 179 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் 161 பேரும், தெலங்கானாவில் 158 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் 128 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 104 பேரும், குஜாராத் மாநிலத்தில் 95 பேரும், ஜம்மு காஷ்மீரில் 75 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 63 பேரும், பஞ்சாப்பில் 53 பேரும், ஹரியாணாவில் 49 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுளளனர்.

corono 2 - 2025

பிஹாரில் 29 பேர், சண்டிகரில் 18 பேர், உத்தரகாண்ட்டில் 16 பேர், லடாக்கில் 14 பேர் கொரோனாவால் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்தமான் நிகோபர் தீவுகளில் 10 பேரும், சத்தீஸ்கரில் 9 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 6 பேரும், ஒடிசா, புதுச்சேரியில் தலா 5 பேரும் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட், மணிப்பூரில் தலா 2 பேரும், மிசோரம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் தலா ஒருவரும் கொரோனாவில் நோயில் சிக்கியுள்ளனர்”.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories