தப்ளிக் இ ஜமாத் உறுப்பினர்களின் கொடூர சேட்டைகள்! அசாமிலும் அவலம்!

Published:

assam hospital - 2026

அசாம் மருத்துவமனையிலும்… தப்ளிக் இ ஜமாத் உறுப்பினர்களின் கொடூர சேட்டைகள் தொடர்கின்றன…. மருத்துவமனையில் கூடவா இவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று சமூக அருவெறுப்பை சம்பாதித்துள்ளார்கள் அவர்கள்!

அசாம் கோலாகாட் மருத்துவமனையில் 42 பேர் தற்போது தனிமைப்படுத்தல் வார்டுகளில் உள்ளார்கள். அவர்கள் டாக்டர்கள் கூறுவதைக் கேட்காமல் தரையெங்கும் எச்சில் துப்பி வருகிறார்கள். அதுமட்டுமின்றி ஜன்னல் வழியாக வெளியேயும் துப்பி வருகிறார்கள்.

மருத்துவர்கள் எத்தனை எடுத்துக் கூறினாலும் கேட்காமல் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். அதனால் டாக்டர்கள் அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளார்கள். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விசுவகர்மா மருத்துவமனையை வந்து பார்ப்பதற்குச் சற்று முன்பு இந்த சம்பவம் நடந்தது.

கொரோனா தனிமைப்படுத்தலில் மொத்தம் 42 பேர் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் தில்லியில் உள்ள தப்ளிக் இ ஜமாத் இஸ்லாம் மத பிரார்த்தனை கூட்டத்தில் பங்கு கொண்டு வந்தவர்களே. அது மட்டுமின்றி அவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதால் இவர்களை தனிமைப்படுத்தி உள்ளார்கள்.

ஆனால் தாம் ஆரோக்கியமாகவே இருப்பதாகக் கூறி டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு தராமல் விபரீதமான சேட்டைகளில் ஈடுபடுகிறார்கள். இது குறித்து மருத்துவர்கள் அரசிடம் புகார் அளித்துள்ளனர்.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

தில்லி தப்ளிக் இ ஜமாத் மார்கஸ் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல மாநிலங்களுக்கும் திரும்பி வந்தவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இவ்வாறு எச்சில் துப்பி நோயைப் பரப்புவதும், அனைவரும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதும் இப்போது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தில்லி கூட்டத்துக்குச் சென்று வந்தவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்கள் குடும்பத்தினரிடையே கூட இந்த வைரஸ் பரவாமல் அரசு காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள்கள் முன்வைக்கப் படுகின்றன.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img