விபரீத ஐடியா…! சொந்த ஊருக்கு போகணும்னு… பொணம் மாதிரி வேசம் போட்டு போனவய்ங்க..!

ambulance - 2026

சொந்த ஊருக்கு போவதற்காக சடலம் போல் வேடமிட்டு சென்றவர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

லாக் டவுன் காரணமாக மக்களில் சிலர் மிகவும் சிரமப் படுகிறார்கள். சம்பளமின்றி வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் சொந்த ஊருக்கு கிளம்பிச் செல்கிறார்கள். சிலர் கால் தேயும்படி நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்து செல்கிறார்கள். இன்னும் சிலர் மூளைக்கு வேலை கொடுத்து சதித் திட்டம் தீட்டுகிறார்கள்.

சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஒருவர் ஒரேடியாக விபரீத ஐடியாவை செயல்படுத்தியுள்ளார். ஒருவர் சவம் வேடமிட்டு சென்று, உடன் வந்தவர்களையும் சேர்த்து போலீசார் கையில் சிக்க வைத்தார்.

இந்தச் சம்பவம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் நடந்துள்ளது. தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மூன்று பேர் திட்டம் தீட்டி உள்ளார்கள். அவர்களில் ஒருவர் இறந்து போனதாக டெத் சர்டிபிகேட் கூட வாங்கிவிட்டார்.

கிராமத்திற்குப் போவதற்கு ஆம்புலன்சை வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். போலீசாருக்கு சந்தேகம் வராதபடி அந்த மூவரில் ஒருவர் மரணித்தது போல் படுத்துக்கொண்டு நடித்தார்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

அந்தப் பிணத்தை தம் கிராமத்திற்கு எடுத்துக் கொண்டு செல்கிறோம் என்று செக்போஸ்ட் அருகில் போலீசாருக்கு கூறினார்கள். ஆனால் சூரன் கோட் செக் போஸ்ட்டுக்கு சென்ற போது, போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் ஆம்புலன்சை சோதனை செய்துள்ளனர். அதில் சவம் போல் படுத்து இருந்த மனிதருக்கு டெம்பரேச்சர் பார்த்துள்ளனர்.

அப்போது அந்த நபர் உயிரோடு இருப்பதாகத் தெரிந்து கொண்டார்கள். அதனால் அந்த மூன்று பேருடன் கூட டிரைவரையும் இன்னும் ஒருவரையும் கைது செய்தார்கள்.

அவர்கள் மீது, செக்சன் 420 (ஏமாற்றுதல்), 269 (உயிருக்கு ஆபத்தான வியாதி நோய் பரப்பும் அலட்சிய போக்கு), மற்றும் 188 (அரசாங்க சேவைகளை தடை செய்வது) போன்றவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories