தெலங்காணாவில் 20 சிறு குழந்தைகளுக்கு கொரோனா தொற்று!

Published:

corona testing - 2026
  • ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் தனி சிறுவர் பிரிவில் மருத்துவ சிகிச்சை.
  • கொரோனா தொற்றுநோய் சிறு குழந்தைகளையும் விடாமல் துரத்துகிறது.

தெலங்காணா மாநிலத்தில் இதுவரை 20 சிறுவர் சிறுமியர் கொரோனா பாசிடிவ் வந்து துன்புறுகிறார்கள். இவர்களுக்காக பிரத்தியேகமான வார்டு ஏற்பாடு செய்து மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிறுவர்களுக்கு வந்துள்ளதால் அவர்களுக்கு மருத்துவம் செய்வதில் மருத்துவர்கள் கொஞ்சம் சிரமப் படுகிறார்கள்.

தெலங்காணா மாநிலத்தில் கொரோனா கேசுகள் அதிகரித்து வருகின்றன. இதுவரை 644 கேசுகள் பதிவாகியுள்ள நிலையில் 18 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இப்போது கொரோனா வாயில் சிக்கிய சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது தெலங்காணா மாநில அரசுக்கு சங்கடமாக உள்ளது. கொரோனா பரவலை கண்ட்ரோல் செய்வதற்காக அரசாங்க இயந்திரம் இரவும் பகலுமாக சிரமப் பட்டு வருகிறது. மருத்துவ ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து சேவை செய்து வருகிறார்கள். நோய் பரவிய சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

இவர்களுள் ஒரு மாதம் கூட நிறைவடையாத சிறு குழந்தைகள் கூட உள்ளார்கள்.

பிறந்து 23 நாட்கள் ஆன சிசுவில் இருந்து 12 வயது உள்ள சிறு குழந்தைகள் வரை கொரோனா பாதித்தவர்கள் உள்ளார்கள். இதுவரை தெலங்காணா மாநிலத்தில் 20 பேர் குழந்தைகள் பாசிட்டிவ் என்று அடையாளம் கண்டறிந்துள்ளார்கள்.

இவர்கள் அனைவருக்கும் காந்தி மருத்துவ மனையிலேயே ஐசிஎம்ஆர் கட்டுப்பாடுகளின் படி பிரத்தியேக ட்ரீட்மென்ட் அளித்து வருகிறார்கள். இந்த குழந்தைகளுக்கு தனி வார்டுகளை ஒதுக்கி உள்ளார்கள். அதோடுகூட 20 தனிப்பட்ட மருத்துவர் களையும் நியமித்து மருத்துவம் அளித்து வருகிறார்கள்.

காந்தி மருத்துவமனையில் உள்ள 6வது வார்டில் சிறு குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். ஆயின், பிற உடல்நிலை கோளாறு காரணங்களால் துன்பப்படுகின்றன ஒரு சிறுவனின் கேசு மட்டும் டாக்டர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. மூன்று வயதாகும் அந்த சிறுவனுக்கு பிற ஆரோக்கிய பிரச்சனைகளும் உள்ளன.

அவற்றோடு கூட இப்போது கொரோனாவும் அவனுக்கு வந்துள்ளதால் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பது சிரமமாக மாறி உள்ளது . தற்போது அந்த சிறுவனின் நிலைமை சற்று கவலை அளிப்பதாக உள்ளது என்று கூறு கின்றனர் மருத்துவர்கள்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

அனைவரும் குழந்தைகளானதால் அவர்களுக்கு எதுவும் புரியாமல் போவதும், சொன்னதை கேட்காமல் இருப்பதும், ஒரு இடத்தில் இல்லாமல் அங்கும் இங்கும் சுற்றுவதும், அழுவதுமாக உள்ளார்கள். மேலும் பெற்றோர்களுக்குக் கூட அவர்கள் படும் துன்பம் தீவிரமான மன வேதனையை அளித்து வருகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img