கொரோனா ஜாதி, மதம், நிறம், மொழி வேறுபாடு பார்க்காது.. ஒற்றுமையாக இருங்கள்: பிரதமர் மோடி!

modi speech2 - 2026

கொரோனா வைரஸ் ஜாதி, மதம், நிறம், மொழி வேறுபாடு பார்க்காது, 2020ம் வருடம் மேடு பள்ளமாக தொடங்கி உள்ளது, கொரோனா மூலம் நிறைய இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சென்னை: 2020ம் வருடம் மேடு பள்ளமாக தொடங்கி உள்ளது, கொரோனா மூலம் நிறைய இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுக்க மத்திய அரசு மூலம் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பின் கொரோனா பரவல் குறைவாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இன்று இரவு இந்த தளர்வு அமலுக்கு வர உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி கொரோனா குறித்தும் அதற்கு எதிரான நடவடிக்கை குறித்தும் தனது ”லிங்கடின்” பக்கத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சிறு குறிப்பை வெளியிட்டுள்ளார். பணியாளர்கள், பிசினஸ்மேன்கள் இருக்கும் தளத்தில் அவர் முக்கியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

பிரதமர் மோடி தனது போஸ்டில், கொரோனாவிற்கு எதிராக உலகமே போராடிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவின் துடிப்பான மற்றும் அறிவார்ந்த இளைஞர்கள் நம் நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும். இந்த நூற்றாண்டில் 2020ம் வருடம் மேடு பள்ளமாக தொடங்கி உள்ளது. கொரோனா மூலம் நிறைய இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

முக்கியமாக பணியாளர்களின் வாழ்க்கையை கொரோனா பெரிய அளவில் மாற்றியுள்ளது. இந்த நாட்களில் வீடுதான் புதிய அலுவலகம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இணையம்தான் புதிய மீட்டிங் அறை என்ற நிலை உருவாகி உள்ளது. அலுவலக இடைவேளை அரட்டை என்பது இப்போது வரலாறு போல ஆகிவிட்டது. நானும் இந்த சூழ்நிலைக்கு தகுந்தபடி என்னை மாற்றிக்கொண்டு இருக்கிறேன்.

நான் தற்போது நடத்தும் பெரும்பாலான மீட்டிங்குகள் அது அமைச்சர்களுடனான மீட்டிங்காக இருந்தாலும் சரி, உலக தலைவர்கள், அலுவலக அதிகாரிகள் என்று யாருடன் நடக்கும் மீட்டிங்காக இருந்தாலும் சரி. எல்லாமே வீடியோ கான்பிரன்ஸ் மூலம்தான் செய்யப்படுகிறது. வீட்டில் இருந்து பணிகளை செய்ய மக்கள் வழிகளை தேடி வருகிறார்கள். வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக நம்முடைய நடிகர்கள் சிறப்பான வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர்.

சில பாடகர்கள் இணையத்திலேயே இசை கச்சேரி நடத்துகிறார்கள். சிலர் இணையத்திலேயே செஸ் விளையாட்டு போட்டிகளை விளையாடுகிறார்கள். இதுபோல பலர் வித்தியாசமாக செயல்படுகிறார்கள். வேலை பார்க்கும் இடங்கள் டிஜிட்டல் மையமாக மாறி வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அதிகாரத்துவம், இடைத்தரகர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் வேகமாக முன்னேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

கொரோனா வைரஸ் ஜாதி, மதம், நிறம், மொழி வேறுபாடு பார்க்காது. நாம் கொரோனாவிற்கு எதிராக ஒன்றாக போராட வேண்டும். நாம் இதில் ஒன்றாக இருக்க வேண்டும். சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். வரலாற்றில் இதற்கு முன் பல நாடுகள் சண்டை போட்டு இருக்கிறது . ஆனால் இந்த நேரம் சண்டைக்கானது அல்ல. நாம் எல்லோரும் ஒன்றாக இதில் செயல்பட வேண்டும்.

இந்தியா வரும் நாட்களில் உலக வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வர வேண்டும். இந்தியாவிற்கு மட்டுமின்றி மொத்த மனித குலத்திற்கும் முன்னேற்றம் ஏற்படும் வகையில் நாம் செயல்பட வேண்டும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு நாம் முன்னேற வேண்டும். இதன் மூலம் நாம் புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories