கொரோனா: தொற்று உள்ளவரை கொத்தாய் காட்டும் ஆரோக்கிய சேது! மேலும் 300 ஹாட்ஸ்பாட்!

arokiya sethu
arokiya sethu

ஆரோக்கிய சேது செயலி மூலம் ஏற்கனவே 650 ஹாட்ஸ்பாட்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் புதிதாக 300 ஹாட்ஸ்பாட்கள் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக நிடி ஆயோக் சி.இ.ஓ., அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு சார்பில் கடந்த ஏப்.,2ம் தேதி ‘ஆரோக்கிய சேது’ செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை அரசு, தனியார் ஊழியர்கள் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிவேகமாக 5 கோடி பேர் பதிவிறக்கம் செய்த செயலியான இது, தற்போது அந்த எண்ணிக்கை 10 கோடியை நெருங்கியுள்ளது. இந்த செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால், கொரோனா ஹாட்ஸ்பாட்கள் குறித்த விவரம், பொது இடங்களில் நோய் தொற்றுள்ள நபர்களை எதிர்கொண்டால் எச்சரிப்பது, தனி நபருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளதாக என தெரிவிப்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த செயலி அளிக்கும்.

இந்த செயலி குறித்து நிடி ஆயோக் சி.இ.ஓ., அமிதாப் காந்த் கூறியதாவது: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வரும் 650 ஹாட்ஸ்பாட்கள் பகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. வைரஸ் பரவி வரும் புதிய பகுதிகளை ஆரோக்கிய சேது செயலி மூலம் எளிதாகக் கண்டறிய முடிகிறது.

அந்த வகையில் இந்த செயலி மூலம் புதிதாக 300 ஹாட்ஸ்பாட்கள் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆரோக்கிய சேதுவை பதிவிறக்கம் செய்தவர்களில் 34 லட்சம் பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவித்துள்ளனர். செயலியில் பதிவு செய்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 65 ஆயிரம் பேரின் வீடுகளுக்கு சுகாதார துறை ஊழியர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.

இதில் 16,000 பேருக்கு டாக்டர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்தவர்களில் 12,500 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் இந்த செயலியில் கூடுதலாக 10 மொழிகள் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories