சலுகைகளும், விதிமுறைகளும்… ரயில்வே அறிவிப்பு!

train 1 - 2026

நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காகவும், எம்.பி.க்களுக்காகவும் சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட் வழங்கும் கவுன்ட்டர்கள் குறைந்த அளவு திறந்திருக்கும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், நோயாளிகள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்களில் வழக்கம் போல் டிக்கெட் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

தில்லியிலிருந்து 15 சிறப்பு ரயில்கள் பல்வேறு நகரங்களுக்கும் இன்று மாலை முதல் இயக்கப்படுவதையொட்டி இந்த அறிவிப்பை நேற்று இரவு ரயில்வே வெளியிட்டது.

இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பில், ”சிறப்பு ரயில்கள் புறப்படும் இடங்கள், இடைநிறுத்தங்கள், சென்றடையும் நகரங்களில் இருக்கும் ரயில் நிலையங்களில் மட்டும் மிகக்குறைந்த அளவு டிக்கெட் வழங்கும் கவுன்ட்டர்கள் திறக்கப்படும்.

இந்த டிக்கெட் கவுன்ட்டர்களில் முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், சுதந்திரப்போராட்ட வீரர்கள், ரயில்வே ஊழியர்களுக்கான வேலைக்கான பாஸ், சிறப்பு டிக்கெட்டுக்கான பாஸ்கள் பெறலாம்.

அதேசமயம், இந்த டிக்கெட் கவுன்ட்டர்களில் பொதுமக்களுக்கு டிக்கெட் வழங்கப்படாது. அவர்கள் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் மட்டுமே டிக்கெட் பெற முடியும்.

மேலும், மாற்றுத்திறனாளிகள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு இந்த சிறப்பு ரயிலில் பயணிக்க டிக்கெட் கட்டணத்தில் சலுகை தரப்படும். மூத்த குடிமக்கள் கூட இந்த சிறப்புரயிலில் டிக்கெட் கட்டணத்தில் சலுகை தரப்படாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொழில்நுட்பக் காரணங்களால் சற்று தாமதமாகத் தொடங்கியது. முதல் ஒன்றரை மணிநேரத்தில் அனைத்து வழிகளிலும் 18 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

புதுதில்லியிலிருந்து இயக்கப்படும் 15 ரயில்கள், திப்ரூகார்க், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஷ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை, அகமதாபாத், ஜம்மு தாவி ஆகிய நகரங்களுக்குச் செல்கின்றன.

அனைத்துப் பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்டு, குறைந்த அளவு நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும், ராஜ்தானி ரயில் கட்டணத்துக்கு இணையாக இருக்கும். ஏசி 3 அடுக்கு படுக்கையில் 52 பயணிகளும், 2-ம் வகுப்பில் 48 பயணிகளும் மட்டுமே சமூக விலகலைக் கடைப்பிடித்துப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என ரயில்வே தெரிவித்துள்ளது.

பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்துக்கு ரயில் புறப்படும் முன் 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வர வேண்டும், அனைத்துப் பயணிகளும் கண்டிப்பாக முக்கவசம் அணிய வேண்டும், பயணத்துக்கு முன்பாக பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும், பயணிகள் சொந்தமாக படுக்கை விரிப்புகள், கம்பளி ஆகியவற்றையும் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories