April 27, 2025, 10:24 PM
30.2 C
Chennai

கொரோனாவால்… ரத்தான போனாலு பண்டிகை! களையிழந்த தெலங்காணா!

bonalu function telangana
bonalu function telangana

போனாலு பண்டிகையின் திருவிழாக்கள் ரத்து. போனாலு பண்டிகை இரட்டை மாநகரில் ஜூன் 28 ஞாயிறன்று தொடங்கி ஜூலை 19 ஞாயிறன்று நிறைவு பெறுகிறது. ஆஷாட ஜாத்ரா என்றழைக்கப்படும் போனாலு தெலங்காணாவின் அரசுத் திருவிழா. ஒவ்வொரு வாரம் நகரின் ஒவ்வொரு கோவிலில் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு போனாலு பண்டிகையின் திருவிழாக்கள் ரத்து.

இம்முறை வீட்டிலேயே போனம் சமர்ப்பிக்கவேண்டும்.
கரோனா வைரஸ் கேசுக்கள் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருவதால் தெலங்காணா மாநிலம் முக்கியமான முடிவு எடுத்துள்ளது.

சமுதாயம் ஒன்று கூடி போனாலு திருவிழா கொண்டாடுவதை ரத்து செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இரட்டை மாநகரில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் இந்த முறை களை இழந்து காணப்படும்.

இரட்டை மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாதத்தில் தென்படும் போனாலு பரபரப்பு இந்த முறை இல்லை என்றே கூறலாம். இம்முறை வீடுகளிலேயே போனம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் தலசானி ஸ்ரீநிவாஸ் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.

ALSO READ:  கோயில் நிலங்களில் வசிப்பவர்கள் இனி வாடகைதாரர்களாக மாறினால் மட்டுமே வசிக்க முடியும்!
bonalu function telangana
bonalu function telangana

கரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்த வருடம் சமூகமாக போனாலு திருவிழாக்கள் செய்வதை ரத்து செய்துள்ளதாக புதன்கிழமை ஜூன் 10ம் தேதி அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

கோவில்களில் அம்மனுக்கு பூசாரிகள் மட்டுமே போனாலு சமர்ப்பிப்பார்கள் என்று கூறினார். மக்கள் அவரவர் வீடுகளில் அவரவர் வீட்டு தெய்வங்களுக்கு போனாலு சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவில் வளாகத்தில் பூஜாரிகள் கடங்கள் எனப்படும் கலசங்களை ஊர்வலம் எடுத்துச் செல்வர் என்றும் அமைச்சர் கூறினார். அம்மனுக்கு பட்டு வஸ்திரங்கள் கூட பூசாரிகளே சமர்ப்பிப்பார்கள் என்றும் தெரிவித்தார். அரசாங்க உத்தரவை இரட்டை மாநகர மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

bonalu jatra4
bonalu jatra4

ஹைதராபாத், செகந்திராபாத் நகரங்களுக்குள் கரோனா கேசுகள் மிக அதிகமாக பரவி வரும் பின்னணியில் இம்முறை போனாலு திருவிழாக்களை ஆடம்பரமாக நடத்த வேண்டாம் என்று தெலங்காணா மாநிலம் முடிவெடுத்துள்ளது.

அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்த அம்சத்தின் மீது கலந்துரையாடி முடிவெடுத்துள்ளனர் . கோவில்களில் போனாலு சமர்ப்பிப்பதற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று தீர்மானித்துள்ளார்கள்.

ALSO READ:  யோகி அரசின் மஹாகும்பமேளா ஏற்பாடுகள் சிறப்பு; பாதுகாப்பாக உணர்கிறோம்: வெளிநாட்டு பக்தர்கள் சிலிர்ப்பு! 

போனம் என்றால் போஜனம். அம்மனுக்கு நைவேத்தியமாக போஜனம் அளிப்பது போனாலு எனப்படுகிறது. தெலங்காணாவில் பழங்காலம் முதல் இந்த பண்டிகையை மிக அமர்க்களமாக உற்சாகமாக நிர்வகித்து வருவது வழக்கம். தெலங்காணா தனி மாநிலம் ஏற்பட்ட பிறகு அரசாங்கம் போனாலு பண்டிகை யை அதிகார பண்டிகையாக அறிவித்தது.

bonalu jatra
bonalu jatra

மழைநாளில் வியாதிகள் வரக் கூடாது என்ற கோரிக்கையோடு அம்மனுக்கு நைவேத்தியம் சமர்ப்பிப்பார்கள். ஆனால் கொரோனா வைரஸ் தலைவிரித்தாடும் வேளையில் ஊர்வலங்களும் கூட்டமாகச் சேர்ந்து செய்யும் பூஜை நிகழ்ச்சிகளும் நிர்வகிப்பது சரியல்ல என்று பலரும் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.

குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் சேர்ந்து அவரவர் வீட்டிலேயே அம்மனுக்கு நைவேத்தியம் சமர்ப்பித்துக் கொள்ளலாம் என்றும் ஆலயங்களில் மக்கள் ஒன்றுகூடி சமர்ப்பிக்காததால் எந்த தோஷமும் வராது என்றும் பண்டிதர்கள் தெரிவித்தார்கள்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

Topics

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

Entertainment News

Popular Categories