யோகா பிதாமகர் பாலய்யா!

Published:

yoga chittyala balaiah
yoga chittyala balaiah

95 வயதில் 30 ஆண்டுகளாக யோகப்பயிற்சி செய்வதோடு இந்த ஞானத்தை பிறருக்கும் அளித்து வருகிறார். கழியில்லாத நிமிர்ந்த நடை, தளர்வில்லாத ஸ்கூட்டர் டிரைவிங், கண்ணாடியில்லாத கண்பார்வை, கம்பவுண்டராக வேலை பார்த்தும் ஒரு மருத்து மாத்திரை சாப்பிடாத உடல்…

இன்றைக்கும் பரிபூரண ஆரோக்கியத்தோடு தானே தன் வேலைகளை செய்து கொள்கிறார். உற்சாகம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். ஆச்சரியப்படவைக்கும் சிட்யால பாலையா.

தெலங்காணாவில்மெட்பல்லி களாநகரைச் சேர்ந்த பாலையா படிக்கும்போதே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) அங்கத்தினராக இருந்தார். அப்பொழுதே சிலம்பம், நான்சாக் போன்ற பிரிவுகளில் பயிற்சி பெற்றார். அதன்பின் உள்ளூர் அரசு மருத்துவமனையில் காம்பவுண்டராக சேர்ந்து பணிபுரிந்து பதவி ஓய்வு பெற்றார்.

yoga chittyala balaiah
yoga chittyala balaiah

அதன் பின் யோகாசனங்களின் மீது முழுமையாக ஈடுபட்டார். நிஜாமாபாத் மாவட்டம் மார்தாடடைச் சேர்ந்த யோகாநந்த சுவாமியிடம் சீடராக சேர்ந்து பெங்களூரில் உள்ள விவேகானந்தா யோகா துணை அமைப்பில் யோகாப்பியாசம் செய்து சர்டிபிகேட் பெற்றார்.

பிரபலமான யோகாசாரிணி வனஜாரெட்டியோடு சேர்ந்து ஹைதராபாத், கரீம்நகர் மற்றும் பல இடங்களில் யோகா இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தினார். நீண்ட காலம் சாதனை செய்தால் மட்டுமே சாதிக்கக்கூடிய பல ஆசனங்களை இவர் இந்த வயசிலும் எளிமையாக செய்கிறார்.

yoga chittyala balaiah
yoga chittyala balaiah

30 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடாமல் தினமும் இரவு இரண்டு மணியிலிருந்து காலை 4 மணி வரை 160க்கும் மேலான ஆசனங்களை செய்து வருகிறார். தினமும் ஆசனங்கள் செய்வது, சரியான உணவு நியமங்களை கடைப்பிடிப்பதால் எந்தவித ஆரோக்கிய பிரச்சனைகளும் அவரை அண்டியதில்லை. எந்தவித மருந்து ஊசி பயன்படுத்துவதில்லை. கிட்டப்பார்வை, எட்டப்பார்வை என்ற பிரச்சனை இல்லவே இல்லை. ஆசனங்களோடு கூட கண் தொடர்பான பயிற்சிகள் கூட தினமும் செய்து வருவதால் பரிபூரண ஆரோக்கியத்தோடு இருப்பதாக கூறுகிறார்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

அதுமட்டுமல்ல உற்சாகம் உள்ளவர்களுக்கு மேட்பல்லி நகரிலுள்ள விவேகானந்தா கேந்திரத்தில் ஆசனங்கள் மீது இலவச பயிற்சி அளிக்கிறார்.

பிசியோதெரபி, சுஜக் தெரபியிலும் நிபுணராக இருப்பதோடு கூட ஆல் இந்தியா பிஸியோதெரபி கல்லூரியிலிருந்து சர்டிபிகேட் கூட பெற்றுள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img