ரவுடிகளை பிடிக்க சென்ற காவல் ஆய்வாளர் உட்பட 8 பேரை சுட்டு கொலை! தப்பிய கும்பல்!

up

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் ரவுடி ஒருவரை கைது செய்ய போலீசார் சென்ற போது ரவுடிகள் நடத்திய தாக்குதலில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உள்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 4 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கான்பூர் மாவட்டத்தில் உள்ள சவுபேபூர் சரகத்துக்கு உட்பட்ட திக்ரு கிராமத்தி பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இவர் மீது கொலை, கொள்ளை என சுமார் 60 வழங்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த விகாஸ் துபேவை கைது செய்ய போலீசார் திக்ரு கிராமத்துக்கு நேற்று இரவு சென்றுள்ளனர். கிராமத்துக்கு போலீசை வரவிடாமல் தடுக்க பல தடைகளை வழி முழுவதும் ரவுடிகள் போட்டதாக கூறப்படுகின்றது.

up

அவரை பிடிக்கவும், வீட்டில் சோதனை நடத்தவும் 16 பேர் கொண்ட போலீஸ் குழு அவரது வீட்டிற்கு சென்றது. அப்போது ஒரு கட்டிடத்தின் மேல் ஏறி நின்றிருந்த துபேவின் ஆட்கள் ஜேசிபியை சாலையின் நடுவழியில் நிறுத்தை போலீசாரை மறைத்தனர்.

அவற்றை எல்லாம் தாண்டி ஊருக்கு உள்ளே சென்ற போது, மாடியில் பதுங்கி இருந்த ரவுடிகள் சிலர் போலீசாரை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்கியுள்ளனர்.

திடீரென போலீசார் மீது அக்கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த கோர சம்பவத்தில் ஒரு டிஎஸ்பி, 3 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும 4 காவலர்கள் கொல்லப்பட்டனர். 4 காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

up

இதில் டிஎஸ்பி தேவந்திர மிஸ்ரா, காவல் ஆய்வாளர் பில்ஹார் உள்பட 8 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 4 போலீசார் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயம் அடைந்த அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக போலீஸ் வருதை முன்கூட்டிய குற்றவாளிகள் அறிந்திருந்ததுடன், எச்சரிக்கையாக இருந்துள்ளனர். போலீஸ் குழு வந்த போது அவர்களை திட்டமிட்டு சரமாரியாக தாக்கிவிட்டு அந்த குழு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

up

போலீசார மீது தாக்குதல் நடந்த உடனேயே, எஸ்.எஸ்.பி தினேஷ்குமார், எஸ்.பி. (மேற்கு) டாக்டர் அனில் குமார் மற்றும் மேலும் மூன்று எஸ்.பிக்கள். தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தை அடைந்தனர்.

கன்னூஜ் மாவட்டத்தைச் சேர்ந்த போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். ஆனால் அங்கிருந்த ரவுடிகள் அனைவரும் தப்பிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் விசாரணை நடத்தும் போலீசார்
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பேசியுள்ள உத்தரபிரதேச டிஜிபி ஹெச்.சி.அஸ்வதி, “ரவுடி துபேயை கைது செய்ய தான் போலீசார் அங்கே சென்றுள்ளனர். ஆனால் ரவுடிகள் துப்பாக்கி கொண்டு தாக்குதல் நடத்துவார்கள் என எதிர்பார்க்கவில்லை. தாக்குதல் நடத்திய ரவுடிகளை பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories