December 6, 2025, 2:37 PM
29 C
Chennai

மகளால் மாட்டிக் கொண்ட தங்க கடத்தல் ஸ்வப்னா!

swapana daughter

தங்கக்கடத்தல் ஸ்வப்னா பெங்களூருக்கு காரில் தப்பி செல்ல ஹவாலா கும்பல் உதவி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், பெங்களூரில் பதுங்கி இருந்த ஸ்வப்னாவை அவரது மகள் பயன்படுத்திய சாட்டிலைட் போன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்வப்னா கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டது குறித்து தோண்ட தோண்ட புதிய தகவல்கள் கிடைத்து கொண்டே இருக்கின்றன. ஸ்வப்னாவின் தங்கக்கடத்தல் விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது அவர்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து விட்டாலும், தொடர்ந்து அவர்கள் கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் சிறை அடைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா பரிசோதனைகள் காரணமாக ஸ்வப்னா மற்றும் சந்தீப் ஆகிய இருவரும் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் உடனடியாக அவர்களை சிறையில் அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதனைத்தொடர்ந்து, ஸ்வப்னாவை நீதிமன்ற காவலில் எடுப்பதற்காக என்.ஐ.ஏ தரப்பில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஸ்வப்னா பெங்களூரில் பதுங்கியபோது அவர் எப்படி? கைது செய்யப்பட்டார் என்பது குறித்தும் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

கேரளா மாநில போலீசார், சுங்க துறையினர் மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் என பல்வேறு புலனாய்வு அமைப்பினரும் ஸ்வப்னாவையும் அவரது கூட்டாளிகளையும் தேடி வந்தனர்.

swapna

இந்நிலையில், ஏற்கனவே ஸ்வப்னாவிருக்கு தீவிரவாதிகள் தொடர்பில் இருப்பார் என சந்தேகம் உள்ள நிலையில், தற்போது ஹவாலா கும்பல் உதவி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொச்சியிலிருந்து ஸ்வப்னாவும் அவரது கூட்டாளி சந்தீப்பும் பெங்களூருக்கு போலி நம்பர் பிளேட் பொருந்திய காரில் தப்பி சென்றது தெரிய வந்துள்ளது.

இதில் போலி நம்பர் பிளேட் என்பது கேரள மாநிலம் மட்டஞ்சேரிக்கு உட்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஸ்வப்னாவின் மகளுக்கு திருவனந்தபுரத்தில் ஒரு நண்பர் இருக்கிறார். இந்நிலையில் ஸ்வப்னாவின் மகள் தொடர்புகொண்டு அவரிடம் பேசியுள்ளார். ‘நாங்கள் மிகவும் ஆபாயகரத்தில் இருப்பதாக’ ஸ்வப்னாவின் மகள் சாட்டிலைட் போன் மூலம் தனது நண்பரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போன் அழைப்பு வந்தபோது ஸ்வப்னாவின் மகளின் நண்பர் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் பிடியில் இருந்தார். அப்போது அதிகாரிகள் நண்பரிடம் சைகையில் ஸ்வப்னாவின் போனை ஆன் செய்யுமாறு கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து செல்போன் ஆன் செய்ததின் மூலமாக அதிகாரிகள், ஸ்வப்னா இருப்பிடத்தை அறிந்து அங்கு சென்றுள்ளனர். இந்நிலையில், பெங்களூரில் உள்ள சர்வீஸ் அப்பாட்மென்டில் வைத்து இருவரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், என்.ஐ.ஏ அதிகாரிகள் ஸ்வப்னாவை பிடிப்பதற்காக அவரது உறவினர்களின் 15 செல்போன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories