நெல்லூரில் சோகம்… மனதை கலக்கும் இரட்டையர் மரணம்!

Published:

nellore-twins-died
nellore-twins-died

ஒரே பிரசவத்தில் இருவர் பிறந்தால் பெற்றோர் எத்தனை மகிழ்ச்சி அடைவர் என்பதை கூறத் தேவையில்லை.

பிரசவமான பின் ஒரு புதுவரவு இருக்கும் என்று எண்ணும்போது இருவர் வீட்டிற்குள் வருவது என்பது நிச்சயம் பெற்றோர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி தான். இரட்டைக் குழந்தைகள் ஒன்றாக வளர்ந்து ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பது வழக்கம். ஒருவரை பிரிந்து ஒருவர் இருக்க முடியாமல் அன்பு அவர்களை ஒன்றிணைக்கும்.

ஆனால் இங்கு ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பிகளான இரட்டையர்களின் வாழ்க்கையை மது பாதியிலேயே நிறுத்தி விட்டது. நெல்லூர் மாவட்டத்தில் இத்தகைய சம்பவம் நடந்தது. அனுமசமுத்திரம் பேட்டையை சேர்ந்த வேமன சந்து, ரமேஷ் இருவரும் இரட்டையர்கள்.

அருந்துவதற்கு மது கிடைக்காமல் சானிடைசர் குடித்து உயிரை விட்டார் ரமேஷ். தம்பியின் மரணம் சந்துவை ஆழமாக தாக்கியது. அதனால் தனியாளாகி விட்டோம் என்ற வருத்தத்தால் சந்து கவலையில் ஆழ்ந்தார். ரமேஷின் அந்திமக் கிரியைகள் நடக்கையில் சந்து துயரம் தாங்காமல் மயங்கி விழுந்தார்.

குடும்பத்தினர்களும் உறவினர்களும் சந்துவை மருத்துவமனையில் சேர்த்தார்கள். சந்துவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அதற்குள்ளேயே மரணமடைந்ததாக கூறினார்கள். வளர்ந்து வரும் இளைய மகன்களின் திடீர் மரணத்தால் அந்த பெற்றோர் தீராத சோகத்தில் மூழ்கினர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img