ஒரே மாதத்தில் 50 ‘ஆன்லைன்’ கூட்டங்கள்: பிரதமர் மோடி சாதனை!

Published:

pm-modi-in-online-meeting
pm-modi-in-online-meeting

கொரோனா ஊரடங்கின் போது ஒரு மாத காலத்தில் 50க்கும் அதிகமான ஆன்லைன் கூட்டங்களை நடத்தியுள்ள பிரதமர் மோடி.

கொரோனா ஊரடங்குதல் காரணமாக தனது வீடு மற்றும் அலுவலகத்தில் மட்டுமே இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக கடந்த ஒரு மாதத்தில் பல்துறை அதிகாரிகளுடனும் 50 க்கும் மேற்பட்ட ஆன்லைன் கூட்டங்களை நடத்தியுள்ளார்.

இந்த கூட்டங்களில் பெரும்பாலானவை பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. பல்வேறு துறைகளில் முக்கிய முடிவுகளை எடுக்கவும், பல்வேறு துறைகளில் உள்ள தடைகளை அகற்றவும் பிரதமர் கூட்டங்களை நடத்தினார்.

வழக்கமான அதிகாரிகளோடு நடக்கும் கூட்டங்கள் மற்றும் பொது ம்களை சந்திக்கும் கூட்டங்கள் இல்லாத நிலையில் பிரதமரின் பெரும்பாலான கூட்டங்கள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. மூத்த அதிகாரிகள் பிரதமரை கிட்டத்தட்ட 1000 மணி வேலை நேரங்களுக்கு சந்தித்தனர்.

ஒவ்வொரு கூட்டத்திலும் சராசரியாக 10 அதிகாரிகள் இரண்டு மணி நேரம் கலந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா காரணமாக வீழ்ச்சியடைந்த பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து மூளைக்கு ஆழ்ந்த வேலை கொடுக்கும் விதமாக இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

உள்கட்டமைப்பை உருவாக்குதல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், சுகாதாரப் பாதுகாப்பு, வரிக் கொள்கை, நலத்திட்டங்களை செயல் படுத்துதல் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து நரேந்திர மோடி விவாதித்தார்.

பல்வேறு துறைமுகங்களில் மீதமுள்ள நிலங்களை முறையாகப் பயன்படுத்தவும், வரி முறையில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், கிராமப்புறங்களில் ஆன்லைன் வகுப்புகளை வழிமுறைப்படுத்தவும், யுபிஐ மற்றும் டிபிடி திட்டங்களை மேலும் அதிகம் உபயோகிப்பது போன்ற பல பிரிவுகள் குறித்து மோடி நிர்ணயங்கள் எடுத்துக் கொண்டார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img