கொரோனா: பெண்கள் சேலை துப்பட்டா அணியத் தடை! மருத்துவமனை அதிரடி!

bankalore

அடுத்தடுத்து இரு பெண்கள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பெண் கொரோனா நோயாளிகள் துப்பட்டா அணியத் தடை விதித்து பெங்களூரு மருத்துவமனை ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூருவில் செயல்பட்டு வரும் கே.சி பொது மருத்துவமனையில் சமீபத்தில் அடுத்தடுத்து இரு பெண் கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

இருவருமே நள்ளிரவில் கழிப்பறை சென்று அங்கேயே தங்களது சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து பெண் கொரோனா நோயாளிகள் சேலை, துப்பட்டா உள்ளிட்ட உடைகள் அணியத் தடை விதித்து பெங்களூரு மருத்துவமனை ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரையா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

இரு பெண்கள் அடுத்தடுத்து தாங்கள் அணிந்திருந்த சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்தே உடை நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி பெண் நோயாளிகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறையில் வழங்கப்படும் கவுன் போன்ற உடையை அணிந்து கொள்ள வேண்டும். இதற்கு சில வயதான பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் நாங்கள் அதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

அதேநேரம் நோயாளிகளின் அருகே இருபக்கமும் உள்ள படுக்கைகளில் உள்ள மற்ற நோயாளிகளை அவர்களைக் கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். குறிப்பாக அவர்கள் கழிப்பறை செல்லும்போது கூடவே சென்று உதவி, அவர்கள் பத்திரமாக வெளிவருவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்களுக்கு இரவில் சிறிய அளவில் தூக்க மருந்து தருவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம்.

அவர்களது மனநலனை நல்ல முறையில் வைத்திருக்க வார்டுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் நிறுவப்பட்டுள்ளது. அதன்மூலம் ஆரோக்கியம் சார்ந்த நிகழ்சிகள், தியானம் குறித்த பயிற்சிகள், படங்கள் மற்றும் நாடகங்கள் ஒளிபரப்பப்படுகிறது. இவற்றுடன் சேர்த்து மருத்துவமனை மனநல மருத்துவரும் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories