கொரோனா: பெண்கள் சேலை துப்பட்டா அணியத் தடை! மருத்துவமனை அதிரடி!

bankalore

அடுத்தடுத்து இரு பெண்கள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பெண் கொரோனா நோயாளிகள் துப்பட்டா அணியத் தடை விதித்து பெங்களூரு மருத்துவமனை ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூருவில் செயல்பட்டு வரும் கே.சி பொது மருத்துவமனையில் சமீபத்தில் அடுத்தடுத்து இரு பெண் கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

இருவருமே நள்ளிரவில் கழிப்பறை சென்று அங்கேயே தங்களது சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து பெண் கொரோனா நோயாளிகள் சேலை, துப்பட்டா உள்ளிட்ட உடைகள் அணியத் தடை விதித்து பெங்களூரு மருத்துவமனை ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரையா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

இரு பெண்கள் அடுத்தடுத்து தாங்கள் அணிந்திருந்த சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்தே உடை நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி பெண் நோயாளிகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறையில் வழங்கப்படும் கவுன் போன்ற உடையை அணிந்து கொள்ள வேண்டும். இதற்கு சில வயதான பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் நாங்கள் அதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

அதேநேரம் நோயாளிகளின் அருகே இருபக்கமும் உள்ள படுக்கைகளில் உள்ள மற்ற நோயாளிகளை அவர்களைக் கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். குறிப்பாக அவர்கள் கழிப்பறை செல்லும்போது கூடவே சென்று உதவி, அவர்கள் பத்திரமாக வெளிவருவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்களுக்கு இரவில் சிறிய அளவில் தூக்க மருந்து தருவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம்.

அவர்களது மனநலனை நல்ல முறையில் வைத்திருக்க வார்டுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் நிறுவப்பட்டுள்ளது. அதன்மூலம் ஆரோக்கியம் சார்ந்த நிகழ்சிகள், தியானம் குறித்த பயிற்சிகள், படங்கள் மற்றும் நாடகங்கள் ஒளிபரப்பப்படுகிறது. இவற்றுடன் சேர்த்து மருத்துவமனை மனநல மருத்துவரும் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories