December 6, 2025, 2:53 PM
29 C
Chennai

கொரோனா மரணம்; கோர்ட்டுக்கு போனதால்… ரூ.6 லட்சம் பில் தள்ளுபடி செய்த தனியார் மருத்துவமனை!

hyderabad hospital - 2025
  • கோர்ட்டுக்கு சென்ற கொரோனா மரணமடைந்தவரின் மனைவி.
  • ஹைதராபாதில் பெயர்பெற்ற பிரைவேட் மருத்துவமனை 6 லட்ச ரூபாய் பில்லை ரத்து செய்தது.

ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரைவேட் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் மரணித்ததால் அப்போது வரை அளித்த மருத்துவ சிகிச்சைகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் 10 லட்சம் ரூபாய் பில் போட்டது.

தற்போது கொரோனா தொற்றின் தீவிர சூழலை சில கார்ப்பரேட் மருத்துவமனைகள் கேஷ் செய்து கொள்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுகிறது. கோவிட் சிகிச்சைக்கு பிரைவேட் மருத்துவமனையிலும் அனுமதிக்கலாம் என்று கூறிய நாள் முதல் அது தொடர்பான சம்பவங்கள் நிறைய நிகழ்ந்து வருகின்றன.

பிரைவேட் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் கொள்ளை யடிப்பதற்கு முன்வந்துள்ளன. பல லட்சங்களில் பில் கேட்கப்படுவதால் பல நோயாளிகள் செல்பி வீடியோக்களை எடுத்து சோஷல் மீடியாவில் பதிவு செய்து வருகிறார்கள். இதனால் அரசாங்கம் தீர்மானித்த சார்ஜ்களுக்கு பல மடங்கு அதிகம் பிரைவேட் மருத்துவமனைகள் வசூல் செய்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன.

இந்த விதத்தில் கோவிட் நோயாளி ஒருவர் மரணம் அடைந்தால் உடலைக் கொடுப்பதற்கு மீதி பில்லையும் மொத்தமாக கட்டினால் தான் தருவோம் என்று முடிவாக தெரிவித்து விடுகின்றனர்.

ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரைவேட் மருத்துவமனை கூட இதே போல் செய்தது. வேறு வழியின்றி கொரோனாவால் மரணமடைந்தவரின் மனைவி ஹைகோர்ட் உதவியை நாடினார். அதனால் மருத்துவமனை நிர்வாகம் இறங்கி வந்தது. ஒரேயடியாக 6.4 லட்சம் ரூபாய் பில்லை ரத்து செய்தது.

விவரங்கள் இவை… அண்மையில் ஒருவர் கொரோனா பாதிப்போடு ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரைவேட் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது மரணித்தார். அதுவரை அளித்த வைத்திய சிகிச்சைக்கு மருத்துவமனை நிர்வாகம் 10 லட்சம் வரை பில் போட்டது. இறந்தவரின் குடும்ப அங்கத்தினர்கள் ஓரளவிற்கு பணம் கட்டினார்கள்.

ஹைதராபாதில் தனது கணவரின் உடலைத் தர மறுத்ததற்காக கோவிட் -19 பாதிக்கப்பட்டவரின் மனைவி தெலங்காணா உயர்நீதிமன்றத்தில் கான்டினென்டல் மருத்துவமனை, நானக்ரம்குடாவுக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்தார். ஒரு நாள் கழித்து தனியார் மருத்துவமனை ரூ. 6,41,175.63 நிலுவையில் உள்ள பில்லை தள்ளிவிட்டு ஜூலை 24 அன்று உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது.

பாதிக்கப்பட்டவரின் சகோதரர் வெங்கடசாமி கொண்டா புரம், ஊடகத்தாரிடம் கூறுகையில் “மருத்துவமனை ஊழியர்கள் வெள்ளிக்கிழமை என்னை அழைத்து உடலை ஒப்படைத்தனர். நிர்வாகம் ஆரம்பத்தில் குடும்பத்தினரிடம் ரூ .10 லட்சம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டது, இருப்பினும் நாங்கள் நீதி மன்றத்தை அணுகியதால் எங்கள் பிரச்சினைகளைக் கேட்டு அவர்கள் ரூ .6.4 லட்சம் கட்டணத்தை தள்ளுபடி செய்தனர் ”.

அதிக காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறால் கொண்டாபுரம் மோகன் பாபு ஜூலை 17 அன்று கான்டினென்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைகள் கோவிட் பாசிடிவ் என்று காட்டின. அப்போதிருந்து, டாக்டர்கள் அவருக்கு கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஜூலை 22 அன்று, அந்த நபர் வைரஸால் இறந்தார். இருப்பினும் குடும்பத்தால் ரூ .6.41 லட்சம் நிலுவையில் உள்ள பில்லை அளிக்க முடியவில்லை.

“நான் தினசரி கூலித் தொழிலாளி. என் கணவர் ஹைதராபாத்தின் மோஸ்பேட்டில் உள்ள லக்ஷ்மிகலா சசிகலா தியேட்டரில் வாச்மேனாக பணிபுரிந்தார். கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து திரைப்பட தியேட்டர்கள் மூடப்பட்ட பிறகு என் கணவருக்கு வேலை இல்லை. எந்த வருமானமும் இல்லாததால் எங்களால் முடிவெடுக்க முடியவில்லை ” என்றார் இறந்தவரின் மனைவி லாவண்யா.

hyderabad hospital1 - 2025

முதலில் அவர் ரூ. 2,50,000 கடன்வாங்கி மருத்துவமனை கட்டணத்தை செலுத்தினார். ஆனால் ஜூலை 22 அன்று, அவர்கள் லாவண்யாவிடம் மொத்த பில் ரூ. 8,91,175.63 கட்டும்படி கூறினர். மருத்துவமனை அதிகாரிகள் லாவண்யாவை மீதமுள்ள ரூ. 6,41,175.63 செலுத்திய பின்னர் கணவரின் உடலை எடுத்துக் கொள்ளுங்கள் என்றனர்.

நோயாளி மரணித்த பின் மீதி உள்ள ரூ 6.4 லட்சத்தையும் கட்டினால்தான் உடலைத் தருவோம் என்று மருத்துவமனை நிர்வாகம் தீர்மானமாக கூறி விட்டது. அதனால் வேறு வழியில்லாத நிலையில் அந்த பெண்மணி ஹைகோர்ட்டில் ரிட் பெடிஷன் தாக்கல் செய்தார்.

ஹை கோர்ட் விசாரணைக்கு சில மணி நேரங்கள் முன்பே மருத்துவமனை 6.4 லட்சம் ரூபாய்கான பில்லை ரத்து செய்து உடலை குடும்பத்தாருக்கு அளித்து விட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories