ராமர் கோயிலுக்கு தங்கச் செங்கல் அளிப்பதாக… மொகலாய அரச வாரிசு மீண்டும் அறிவிப்பு!

Published:

hafidutheen - 2026

அயோத்தி ராமர் கோவிலுக்கு தங்கச் செங்கல் பரிசளிக்கப் போவதாக கூறிய மொகலாய அரச பரம்பரை வாரிசு மீண்டும் அதனை உறுதிப் படுத்திக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அயோத்தியில் கட்டப்போகும் ராமர் கோவிலுக்கு தங்கத்தாலான செங்கல் பரிசாக அளிக்கப் போகிறேன் என்று முகலாயச் சக்கரவர்த்தியின் வாரிசு என்று தன்னை அறிவித்துக் கொண்டிருந்த பிரின்ஸ் யாக்கோபு ஹபீதுத்தீன் டூசி இப்போது மீண்டும் அறிவித்துள்ளார்.

ஒரு கிலோ எடையுள்ள தங்க செங்கல்லை பிரதமருக்கு அளிப்பேன் என்றும் அதனை கோவில் நிர்மாணத்தில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார். இது 100 கோடி ஹிந்துக்களின் மன உணர்வையும் நம்பிக்கையையும் மதிக்கும் நேரம் என்றார் அவர்.

இந்த நேரத்தில் இந்துக்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்றும் பிரதமரை சந்திப்பதற்கு நேரம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியதாக தெரிகிறது.

முன்னதாக, ஹஜீதுத்தீன் டூசி பாபர் மசூதியின் கேர் டேக்கராக தன்னை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img