அப்துல் கலாம் இரண்டாவது முறை ஜனாதிபதியாக வந்திருந்தால்..!?

Published:

tamilisai soundarrajan 1 - 2026

பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் இரண்டாவது முறை ஜனாதிபதி ஆகியிருந்தால் நாட்டிற்கும் இளைஞர்களுக்கும் மிகவும் நன்மை கிடைத்திருக்கும் என்று தெலங்காணா ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து வெளியிட்டார்.

கலாம் நினைவு நாளை முன்னிட்டு ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை தலைமையில் நடந்த பிரத்தியேக நிகழ்ச்சியில் காணொளிக் காட்சி ஊடகம் மூலமாக ஆளுநர் பங்கு பெற்றார். அப்போது ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசுகையில், சகிப்புத்தன்மை மிகுந்த அழகான சமுதாயத்தை உருவாக்குவதே கலாமுக்கு நாம் அளிக்கும் உண்மையான அஞ்சலி என்று குறிப்பிட்டார்.

உழைப்பையும் முயற்சியையும் அப்துல்கலாம் மிகவும் மதித்தார் என்று கூறிய தமிழிசை, கலாம் இரண்டாவது முறை ஜனாதிபதி ஆக முடியாமல் போனது இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநியாயம் என்று குறிப்பிட்டார்.

கலாம் விஷன் மற்றும் கலாம் இலட்சியங்களுக்கு உருவம் கொடுப்பதற்கு பிரதமர் மோடி முயற்சி செய்கிறார் என்று ஆளுநர் கூறினார்.

அப்துல் கலாம் இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு வந்த போது, மத்தியில் சோனியா தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் கூட்டணிக் கட்சியாக இருந்த திமுக., தலைவர் கருணாநிதியும் அதனை முன்னின்று தடுத்தார்கள் என்பதும் கலாம் என்றால் கலகம் என்று கூறி கருணாநிதி அப்போது இழிவுபடுத்திக் கூறினார் என்பதும் அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத இடம் பெற்றவை!

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img