கொரோனா பாதிப்புக்குள்ளான முதியவர் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலே உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை சரமாரியாக தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோயாளிகளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அயராது உழைப்பவர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்தான். இந்த உயர்ந்த சேவை மூலம் பல கோடி மக்கள் உயிர் பிழைத்துள்ளனர். அதில் சிலர் துரதஷ்டவசமாக உயிரிழக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதனால் ஓட்டுனரை உறவினர்கள் தாக்கியுள்ளனர்.
பெங்களூரு நகரில் 70 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று காரணமாக திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி ஓட்டுனரை மீட்டனர்.
கொரோனா நோயாளி உயிரிழந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.