கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவதற்காக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி, வருமான வரி செலுத்துவோர், கணக்கில் காட்டப்படாத தங்களது வருமானம், வெளிநாட்டு சொத்துகள் ஆகியவற்றைத் தெரிவிப்பதற்கு மத்திய அரசு கூடுதலாக சில மாதங்கள் அவகாசம் அளிக்க உள்ளது. கருப்புப் பணத்தை பதுக்குதல் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கு மத்திய அரசு கொண்டு வரவுள்ள “கணக்கில் வராத வெளிநாட்டு வருமானம், சொத்துகள் (புதிய வரி விதிப்பு) மசோதா-2015’ன் படி, சிறைத் தண்டனை பெறாமல் இருக்க மத்திய அரசு இந்த அவகாசத்தை அளிக்கவுள்ளது. இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, வெளிநாட்டு வருமானம், சொத்துகள் ஆகியவை பற்றிய விவரங்களை அரசுக்கு தெரிவிப்பதற்கான தேதிகள் அறிவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கருப்புப் பணத்தை வெளிக்கொண்டுவரும் புதிய திட்டம்: மத்திய அரசு அறிமுகம்?
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

