கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவதற்காக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி, வருமான வரி செலுத்துவோர், கணக்கில் காட்டப்படாத தங்களது வருமானம், வெளிநாட்டு சொத்துகள் ஆகியவற்றைத் தெரிவிப்பதற்கு மத்திய அரசு கூடுதலாக சில மாதங்கள் அவகாசம் அளிக்க உள்ளது. கருப்புப் பணத்தை பதுக்குதல் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கு மத்திய அரசு கொண்டு வரவுள்ள “கணக்கில் வராத வெளிநாட்டு வருமானம், சொத்துகள் (புதிய வரி விதிப்பு) மசோதா-2015’ன் படி, சிறைத் தண்டனை பெறாமல் இருக்க மத்திய அரசு இந்த அவகாசத்தை அளிக்கவுள்ளது. இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, வெளிநாட்டு வருமானம், சொத்துகள் ஆகியவை பற்றிய விவரங்களை அரசுக்கு தெரிவிப்பதற்கான தேதிகள் அறிவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Popular Categories



