December 6, 2025, 2:36 AM
26 C
Chennai

மத்திய அமைச்சரவையில் புதிதாக 9 பேர்: ஓய்வு பெற்ற அதிகாரிகளை அமைச்சர்களாக்கும் மோடி!

புது தில்லி:

செப்.3 ஞாயிற்றுக் கிழமை நாளை மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் 9 பேருக்கு இடம் அளிக்கப்படவுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை செப்.3 ஞாயிற்றுக் கிழமை மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்கு வசதியாக, அமைச்சர்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

செப்.3 ஞாயிறு காலை 10.30 க்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில். உ.பி.,யைச் சேர்ந்த சிவபிரதாப் சுக்லா, சத்யபால் சிங், பீகாரைச் சேர்ந்த அஸ்வினி குமார் செளபே, ஆர்.கே .சிங், ம.பி.,யைச் சேர்ந்த வீரேந்திர குமார் , கர்நாடகாவைச் சேர்ந்த அனந்தகுமார் ஹெக்டே, ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திரசிங் ஷெகாவத், முன்னாள் ஐ.ஏ.எஸ் அல்போன்ஸ் கண்ணந்தனம் மற்றும் ஹர்தீப் சிங்பூரி உட்பட ஒன்பது பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

அருண் ஜேட்லிக்கு அதே நிதியமைச்சகமே ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. அண்மைக் கால ரயில் விபத்துகளுக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து சுரேஷ் பிரபு ராஜினாமா செய்தார். அவருக்கு வேறு துறை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. அனேகமாக அவருக்கு சுற்றுச் சூழல் அமைச்சகப் பொறுப்பு வழங்கப்படலாம். நிதின் கட்கரி கேபினட் அந்தஸ்து பெறக் கூடும். ரவிசங்கர் பிரசாத், ஜேபி நட்டா ஆகியோரும் வேறு அமைச்சகங்களுக்கு மாறக் கூடும் என்று கூறப்படுகிறது.

மோடி சீனா செல்வதால், அதற்கு முன்னதாக அமைச்சரவை மாற்றத்தினை சரிப்படுத்திச் செல்ல திட்டமிட்டுள்ளார். புதிய அமைச்சர்களில் ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ்., ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக இருந்து பின்னர் அரசியலில் புகுந்த நபர்களே அதிகம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories