தனியார் ரயில்: கட்டண நிர்ணயம் ஏதும் இல்லை!

train

இந்தியாவில் வரும் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தனியார் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள 109 வழித்தடங்களில் 151 ரயில்களை தனியார் இயக்குவதற்கு தகுதி தேர்வுக்காக ரயில்வே வாரியம் அண்மையில் அழைப்பு விடுத்தது.

இந்நிலையில், தனியார் ரயில்களில் பயணிக்க கட்டணங்களுக்கான அதிகபட்ச வரம்பு ஏதும் நிர்ணயிக்கவில்லை என ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர்.

அரசிடம் ரயில்வே சேவை இருப்பதால் ஒரே அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தனியாரிடம் சென்றால் காலநேரத்திற்கு ஏற்ப பயணக் கட்டணத்தை அதிகமாக ஏற்றலாம் என பல்வேறு தரப்பினர் புகார் கூறி வந்தனர்.

எனவே ரயில்வே சட்டத்திட்டத்தின் படி நாடாளுமன்றத்தில் அல்லது மத்திய அமைச்சரவை கூடி, தனியார் ரயில் பயணக் கட்டணத்திற்கான உச்சவரம்பை முடிவு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தனியாரிடம் ஒப்படைத்தாலும் கட்டண நிர்ணயம் என்ற முடிவு மட்டும் மத்திய அரசிடம் தான் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்நிலையில், தனியார் ரயில்களுக்கு டிக்கெட் உச்சவரம்பு என்று எதுவும் முடிவு செய்யவில்லை, ஆனால் ரயில்வே எவ்வளவு வேண்டுமானாலும் டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கலாம் என ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவை குறித்து முடிவு எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது தனியார் ரயில் திட்டம் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அப்போதைய கால சூழல் பொறுத்து தான் கட்டணம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.

ஆனால், ரயில்களின் சேவை, பயணிகளுக்கான வசதி, பாதுகாப்பு உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் தனியார் ரயில்களின் வேகம், விபத்து காலத்தில் இழப்பீடு உள்ளிட்டவை குறித்தும் விதிகள் வகுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories