பாசத்தோடு வளர்த்தேன் பாவி கையில் கொடுத்தேன்… வீடியோ பதிவிட்டு தந்தை தற்கொலை! விரக்தியில் இருமகள்களும் ரயிலில் பாய்ந்த சோகம்!

Screenshot_2020_0810_124320

மகளை மருமகன் சித்ரவதை செய்ததால் மனமுடைந்த தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அதிர்ச்சியில், அவரது 2 மகள்களும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பொதட்டூரை சேர்ந்தவர் பாபு, எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டர். இவரது மகள்கள் ஸ்வேதா (26), சாயி (20). சில மாதங்களுக்கு முன் ஸ்வேதாவிற்கு திருமணம் ஆனது. சாயி இன்ஜினியரிங் படித்து வந்தார்.
இந்நிலையில், திருமணம் ஆன சில மாதங்களில் இருந்தே ஸ்வேதாவிற்கும், அவரது கணவர் சுரேஷ்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது

சுரேஷ் குமார், தினமும் ஸ்வேதாவை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

கணவரின் சித்ரவதையால் வேதனையடைந்த ஸ்வேதா, தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதனால் பாபு, சுரேஷ் குமாரை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதன் பிறகும் கூட சித்ரவதை செய்து வந்துள்ளார்.

பாசத்தோடு வளர்த்த மகளின் நிலை கண்டு வேதனையடைந்த பாபு, நேற்று முன்தினம் தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த ஸ்வேதா, சாயி ஆகிய இருவரும் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு சென்று, அவ்வழியாக சென்ற சரக்கு ரயி ல்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பொதட்டூர் போலீசார், மற்றும் கடப்பா ரயில்வே போலீசார், சடலங்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப்பதிந்து ஸ்வேதாவின் கணவனான சுரேஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் சித்ரவதை அனுபவிப்பதை தாங்க முடியாமல் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதும், தந்தை இறந்த அதிர்ச்சியில் அவரது 2 மகள்கள் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாபு தற்கொலை செய்வதற்கு முன் ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். அதில், ‘எனது 2 மகள்களையும் நான் மிகவும் பாசத்துடன் வளர்த்தேன். முதல் மகளான ஸ்வேதாவை நன்கு படிக்க வைத்து என் வசதியை மீறி செலவு செய்து திருமணம் செய்து வைத்தேன்.

ஆனால், அவளின் கணவன் சுரேஷ் குமார் தினமும் சித்ரவதை செய்கிறான். இதையறிந்து நான் அவனிடம் கெஞ்சி கேட்ட போதும் திருந்தவில்லை. வேலைக்கு செல்லாத அவன் ஸ்வேதாவிற்கு கொடுத்த பணம், நகை எல்லாவற்றையும் விற்று மது குடித்து வீணாக செலவழித்துள்ளான். எனது தற்கொலைக்கு அவன்தான் காரணம். அவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories