இயந்திரத்தில் எண்ணாமலேயே நோட்டை வாங்கிப் போட்ட வங்கிகள்!

புது தில்லி:
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, வங்கிகளில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகளைப் பெற்ற போது, அவற்றை எண்ணுவதற்கு இயந்தரத்தைப் பயன்படுத்தவே இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2016 நவம்பர் 9ஆம் தேதி புழக்கத்தில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என்று அறிவித்தார் மோடி. இதன் பின்னர், வங்கிகளில் ரூ.2.89 லட்சம் கோடி மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணம் டெபாசிட் ஆனது. சுமார் 13.33 லட்சம் வங்கிக் கணக்குகளில் 9.72 லட்சம் பேரால் இந்தப் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. இதனை வருமானவரித்துறை தெரிவித்தது. இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், 99 சதவீத பழைய நோட்டுகளுக்கு பதிலாக, புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு புழக்கத்தில் வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இத்தகைய சூழ்நிலையில், வங்கிகளுக்கு வந்த பணம் எவ்வாறு எண்ணப்பட்டது, இயந்திரம் பயன்படுத்தப் பட்டதா என்ற கேள்விகளைக் கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி கேட்கப்பட்டது. இதற்கு, வங்கிகளில் செலுத்தப்பட்ட மதிப்பிழப்பு செய்யப்பட்ட அந்த ரூபாய் நோட்டுகளை எண்ணுதவற்கு ரூபாய் நோட்டு எண்ணும் இயந்திரத்தை பயன்படுத்தவில்லை என்று ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. வங்கிகளில் செலுத்தப்பட்ட மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு எத்தனை பேர் பணியாற்றினர் என்ற தகவலை அளிப்பதற்கு ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories