இயந்திரத்தில் எண்ணாமலேயே நோட்டை வாங்கிப் போட்ட வங்கிகள்!

புது தில்லி:
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, வங்கிகளில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகளைப் பெற்ற போது, அவற்றை எண்ணுவதற்கு இயந்தரத்தைப் பயன்படுத்தவே இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2016 நவம்பர் 9ஆம் தேதி புழக்கத்தில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என்று அறிவித்தார் மோடி. இதன் பின்னர், வங்கிகளில் ரூ.2.89 லட்சம் கோடி மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணம் டெபாசிட் ஆனது. சுமார் 13.33 லட்சம் வங்கிக் கணக்குகளில் 9.72 லட்சம் பேரால் இந்தப் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. இதனை வருமானவரித்துறை தெரிவித்தது. இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், 99 சதவீத பழைய நோட்டுகளுக்கு பதிலாக, புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு புழக்கத்தில் வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இத்தகைய சூழ்நிலையில், வங்கிகளுக்கு வந்த பணம் எவ்வாறு எண்ணப்பட்டது, இயந்திரம் பயன்படுத்தப் பட்டதா என்ற கேள்விகளைக் கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி கேட்கப்பட்டது. இதற்கு, வங்கிகளில் செலுத்தப்பட்ட மதிப்பிழப்பு செய்யப்பட்ட அந்த ரூபாய் நோட்டுகளை எண்ணுதவற்கு ரூபாய் நோட்டு எண்ணும் இயந்திரத்தை பயன்படுத்தவில்லை என்று ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. வங்கிகளில் செலுத்தப்பட்ட மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு எத்தனை பேர் பணியாற்றினர் என்ற தகவலை அளிப்பதற்கு ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

Topics

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Entertainment News

Popular Categories