தெலுங்கு மொழி தினத்தையொட்டி… பிரதமர் மோடி வாழ்த்து!

Published:

modi-speech
modi-speech

தெலுங்கு மொழி தினத்தையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

பேச்சு மொழிப் புரட்சி தலைவர் கிடுகு ராமமூர்த்தியின் பிறந்தநாளை தெலுங்கு மொழி தினமாக நடத்தி வருவது வழக்கம். அதன் தொடர்பாக பல பிரமுகர்கள் தெலுங்கு மொழி தின வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் மூலம் தெலுங்கு மொழி தின கொண்டாட்டங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தெலுங்கு மொழியை முன்னேற்றுவதில் முன்னோக்கி எடுத்துச் செல்லும் அனைவருக்கும் முக்கியமாக இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் என் நன்றிகள். தன் இலக்கிய படைப்புகளாலும் தன் சமூக சீர்திருத்த கண்ணோட்டத்தாலும் பல தலைமுறைகள் மீது அழியாத முத்திரை பதித்த கிடுகு ராமமூர்த்தி அவர்களுக்கு அஞ்சலி என்று மோடி ட்விட்டரில் தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி முப்பவரபு வெங்கையா நாயுடுவும் தெலுங்கு மொழி தின கொண்டாட்டங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். உயர்ந்த சமுதாய நிர்மாணத்திற்கு மொழியும் கலாச்சாரமும் மட்டுமே சிறந்த அஸ்திவாரம் அமைக்கும் என்று அவர் குறிப்பிட்டார். கிடுகு ராமமூர்த்தி பந்துலுவின் பிறந்த நாளான தெலுங்கு மொழி தினம் மொழி, கலாச்சாரம், சமுதாயம் ஆகியற்றில் நாம் எங்கு உள்ளோம் என்ற அம்சத்தை சுயபரிசோதனை செய்வதற்கான வாய்ப்பு என்று அவர் கூறினார்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

தாய்மொழி தினம் என்றால் உண்மையில் தன்மானத்தின் தினமாகும் என்று குறிப்பிட்ட துணை ஜனாதிபதி வெளிநாடுகளிலிருந்து கொண்டு தாய்மொழி மீது அன்போடு விளங்கும் என்ஆர்ஐ தெலுங்கு மக்களுக்கும் அதேபோல் தெலுங்கு மொழி தின கொண்டாட்டங் களுக்கு ஏற்பாடு செய்து பங்கு பெறுபவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் என்று தெரிவித்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img