நீதிபதி பெயரில் நூதன மோசடி! மாட்டிக் கொண்ட போலி விஜிலென்ஸ் ஆபீசர்!

karim-nagar-police-captured
karim-nagar-police-captured

தெலங்காணா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் ஒரு மோசடி ஆசாமியை டாஸ்க் போர்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்னிந்திய மத்திய புலனாய்வு அதிகாரி என்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்த ரமேஷ் என்ற மோசடி நபரின் விவரங்களை காவல் ஆணையர் வி.பி. கமலாசன் ரெட்டி புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

வாரங்கல் அர்பன் மாவட்டம் பீமதேவரபல்லி மண்டலம் மாணிக்யாபூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வாரங்கல் மாவட்ட முதன்மை நீதிபதி தன்னை புலனாய்வு அதிகாரியாக நியமித்து ஆணை கொடுத்ததாக போலிச் சான்றிதழ் தயாரித்தார் என்று காவல்துறை ஆணையர் கமலாசன் ரெட்டி தெரிவித்தார் .

மத்திய, மாநில அரசுத்துறைகளில் அரிதாக இருக்கும் மிகப்பெரிய போஸ்ட் தன்னுடையது என்று கூறிக் கொண்டு அவர் சுற்றியுள்ளார். அதை வைத்து அப்பாவி மக்களிடம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்றார்.

karimnagar-cp-vp-kamalasan-reddy
karimnagar-cp-vp-kamalasan-reddy

கரீம்நகர் மாவட்டம் ஹுஜுராபாதிலுள்ள டிசிஎம்எஸ் காம்ப்ளக்ஸில் சிவில் வழக்குகளை தீர்த்து வைப்பதற்கு ஓர் அலுவலகம் கூட திறந்து சோசியல் மீடியா மூலம் பிரச்சாரம் செய்து மோசடியில் ஈடுபட்டார் என்று அவர் கூறினார்.

கோதாவரிகனியைச் சேர்ந்த ஒரு தொழிலாளரின் மகன் உள்பட பலருக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாய் வசூல் செய்த ரமேஷ், கடன் பெயரில் மேலும் நான்கு கோடி வரை வசூல் செய்ததாகக் கூறினார் ஆணையர்.

வாரங்கல் மாவட்ட சிவில் நீதிமன்ற ஜுடிசியல் விஜிலென்ஸ் அதிகாரி என நம்ப வைப்பதற்காக தன் இரண்டு கார்களின் மேல் ஜூடிசியல் துறைக்கு தொடர்புடைய ஸ்டிக்கர்களை ஒட்டி ஊர் சுற்றி வருவது வழக்கம் என்றார் கமலாசன் ரெட்டி.

புதன்கிழமை அவரை காவலில் எடுத்து அவரிடம் இருந்து போலி ஆவணங்களையும் நீதிபதி பெயரில் தயாரித்த போலி உத்தரவு ஆணைகளையும் ஐடி கார்டுகள், இரண்டு கார்கள், செல்போன்கள், பிற ஆவணங்களையும் கைப்பற்றியதாக காவல் ஆணையர் கமலாசன் ரெட்டி தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories