நீதிபதி பெயரில் நூதன மோசடி! மாட்டிக் கொண்ட போலி விஜிலென்ஸ் ஆபீசர்!

Published:

karim-nagar-police-captured
karim-nagar-police-captured

தெலங்காணா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் ஒரு மோசடி ஆசாமியை டாஸ்க் போர்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்னிந்திய மத்திய புலனாய்வு அதிகாரி என்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்த ரமேஷ் என்ற மோசடி நபரின் விவரங்களை காவல் ஆணையர் வி.பி. கமலாசன் ரெட்டி புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

வாரங்கல் அர்பன் மாவட்டம் பீமதேவரபல்லி மண்டலம் மாணிக்யாபூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வாரங்கல் மாவட்ட முதன்மை நீதிபதி தன்னை புலனாய்வு அதிகாரியாக நியமித்து ஆணை கொடுத்ததாக போலிச் சான்றிதழ் தயாரித்தார் என்று காவல்துறை ஆணையர் கமலாசன் ரெட்டி தெரிவித்தார் .

மத்திய, மாநில அரசுத்துறைகளில் அரிதாக இருக்கும் மிகப்பெரிய போஸ்ட் தன்னுடையது என்று கூறிக் கொண்டு அவர் சுற்றியுள்ளார். அதை வைத்து அப்பாவி மக்களிடம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்றார்.

karimnagar-cp-vp-kamalasan-reddy
karimnagar-cp-vp-kamalasan-reddy

கரீம்நகர் மாவட்டம் ஹுஜுராபாதிலுள்ள டிசிஎம்எஸ் காம்ப்ளக்ஸில் சிவில் வழக்குகளை தீர்த்து வைப்பதற்கு ஓர் அலுவலகம் கூட திறந்து சோசியல் மீடியா மூலம் பிரச்சாரம் செய்து மோசடியில் ஈடுபட்டார் என்று அவர் கூறினார்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

கோதாவரிகனியைச் சேர்ந்த ஒரு தொழிலாளரின் மகன் உள்பட பலருக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாய் வசூல் செய்த ரமேஷ், கடன் பெயரில் மேலும் நான்கு கோடி வரை வசூல் செய்ததாகக் கூறினார் ஆணையர்.

வாரங்கல் மாவட்ட சிவில் நீதிமன்ற ஜுடிசியல் விஜிலென்ஸ் அதிகாரி என நம்ப வைப்பதற்காக தன் இரண்டு கார்களின் மேல் ஜூடிசியல் துறைக்கு தொடர்புடைய ஸ்டிக்கர்களை ஒட்டி ஊர் சுற்றி வருவது வழக்கம் என்றார் கமலாசன் ரெட்டி.

புதன்கிழமை அவரை காவலில் எடுத்து அவரிடம் இருந்து போலி ஆவணங்களையும் நீதிபதி பெயரில் தயாரித்த போலி உத்தரவு ஆணைகளையும் ஐடி கார்டுகள், இரண்டு கார்கள், செல்போன்கள், பிற ஆவணங்களையும் கைப்பற்றியதாக காவல் ஆணையர் கமலாசன் ரெட்டி தெரிவித்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img