மருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்!

Published:

telangana-governor-tamilisai-soundarrajan
telangana-governor-tamilisai-soundarrajan

மருத்துவர்கள் குறித்து மக்களின் கண்ணோட்டத்தில் மாற்றம் வரவேண்டும் என்றும் அவர்களுடைய சேவைகளையும் அவர்களுடைய துயர்களையும் மக்கள் அடையாளம் காணவேண்டும் என்றும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டார்.

மருத்துவர்கள் மீது நோயாளிகளின் உறவினர்கள் தாக்குதல் நடத்துவது குறித்து அவர் கவலை தெரிவித்தார். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துவதோடு இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் அண்மையில் புது சட்டத்தை எடுத்து வந்து உள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் ஆன்லைன் மூலம் நடத்திய அகாடமி ஆஃப் மெடிக்கல் ஸ்பெஷலிடீஸ் கான்வகேஷனில் முக்கிய விருந்தினராக பங்குகொண்டு அவர் உரையாற்றினார்.

மருத்துவர்கள் திறம்பட தம் சேவைகளை அளித்து வருவதால் நாட்டில் கொரோனா மரணங்களின் சதவிகிதம் (சிஎஃப்ஆர்) மிகவும் குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.

கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

ஐஎம்ஏ தேசிய தலைவர் ராஜன் சர்மா, செக்ரடரி ஜெனரல் அசோகன், ஐஎம்ஏ வைஸ் சேர்மன் அஷ்ரப், தெலங்காணா ஸ்டேட் மெடிகல் கவுன்ஸில் சேர்மன் ரவீந்தர் ரெட்டி இதில் பங்கு கொண்டார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img