December 6, 2025, 10:30 AM
26.8 C
Chennai

நவராத்திரி முதல்நாள்: ஸ்வர்ண கவச அலங்காரத்தில் விஜயவாடா கனகதுர்க்கா!

vijayawada-kanakadurga-navratri
vijayawada-kanakadurga-navratri

நவராத்திரி முதல்நாள் ஸ்வர்ண கவச அலங்காரத்தில் விஜயவாடா கனகதுர்க்கை அம்மன்.

இந்திரகீலாத்ரி மலைமீது சரந் நவராத்திரி உற்சவங்கள் கண்ணுக்கு விருந்தாக ஆரம்பமாகியுள்ளன. முதல் நாள் சுவர்ண கவச அலங்காரத்தில் துர்க்கா தேவி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தாள்.

நகர போலீஸ் கமிஷனர் பத்துல ஸ்ரீனிவாசுலு, ஈஓ சுரேஷ்பாபு தம்பதிகள் அம்மனுக்கு முதல் பூஜை நடத்தினார்கள். சுவர்ண கவச அலங்காரத்தில் அம்மனை தரிசித்தால் சகல தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

vijayawada-kanakadurga-navratri1
vijayawada-kanakadurga-navratri1

நவராத்திரி உற்சவங்களின் முதல் நாள் ஆனதால் காலை 3 மணிக்கு சுப்ரபாத சேவையோடு தொடங்கி ஸ்நபனாபிஷேகம், பால போக நிவேதனம், நித்ய அர்ச்சனை ஆகியவற்றை பூர்த்தி செய்து ஒன்பது மணியிலிருந்து பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்தார்கள்.

முதலில் டிக்கெட் உள்ளவர்களை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதித்தார்கள். சுமார் நான்காயிரம் போலீசார் உற்சவங்களில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஒவ்வொரு மணிக்கும் ஒரு ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அம்மனை தரிசிக்கும் ஏற்பாடு செய்திருந்ததாக கனகதுர்கா கோவில் ஈஓ சுரேஷ்பாபு தெரிவித்தார்.

கனகதுர்காதேவி தேவஸ்தானத்தில் ஒவ்வொரு ஆண்டும் உற்சவங்களின் ஒருபகுதியாக நடத்தும் ஆர்ஜித சேவைகளான லட்ச குங்குமார்ச்சனை, ஸ்ரீசக்கர நவாவரண அர்ச்சனை, சண்டீ யாகங்களை கோவிட் சூழ்நிலை காரணமாக பக்தர்களின் பிரதிநிதிகளாக ரித்விக்குகள் நடத்துவார்கள் என்று தெரிவித்தார்.

இந்திரகீலாத்ரி மலை மீது நடக்கும் தசரா உற்சவங்களுக்கு பிரத்தியேக அதிகாரியாக சந்திரசேகர் ஆஜாதை அறநிலையத் துறை அமைச்சகம் நியமித்துள்ளது. மீடியா கோஆர்டினேடராக சீதா டைரக்டர் ராமச்சந்திர ராவை நியமித்துள்ளார்கள்.

மலையின் கீழ் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து க்யூ வரிசை தொடங்குகிறது. மலையின் கீழ் மூன்று க்யூ வரிசைகளாகத் தொடங்கி மேலே வந்தபின் ஓம் டர்னிங் அருகில் ஐந்து வரிசைகளாக விரிகிறது. அங்கிருந்து இலவச, நூறு ரூபாய், 300 ரூபாய் லைன்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அம்மனின் தரிசனம் செய்து கொண்டபின் பக்தர்கள் படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வருவார்கள். கீழே பிரசாதம் கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த வருடம் அன்னதானம் ஏற்பாடுகள் செய்ய வில்லை.

vijayawada-kanakadurga-navratri2
vijayawada-kanakadurga-navratri2

பக்தர்கள் கவனத்திற்கு:

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கைகளுக்கு கிளவுஸ் அணிவது கட்டாயம். லைனில் சமூக இடைவெளி கடைபிடிக்குமாறு போடப்பட்ட வட்டங்களில் மட்டுமே நிற்க வேண்டும். பக்தர்கள் தாங்கள் குடிக்கும் தண்ணீரை தாங்களே பாட்டில்களில் எடுத்து வரவேண்டும்.

10 வயதுக்கு உள்ளாகவும், 65 வயதிற்கு மேலாகவும் உள்ளவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் அனுமதி இல்லை. டிக்கெட் எடுத்து வருபவர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட 15 நிமிடங்கள் முன்பாகவே இருக்க வேண்டும். ஆலயத்தில் லிஃப்ட், பஸ் வசதிகள் இல்லை.

காட் ரோடு வழியை முழுவதுமாக அடைத்து விட்டார்கள். பக்தர்கள் தங்கள் பொருட்களை பாதுகாப்பதற்கு க்ளோக் ரூம்கள் மலையின் கீழே ரதம் சென்டர் அருகில் இருக்கின்றன.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories