புது தில்லி: நாட்டில் சிறுபான்மையினரைப் பாதுகாக்க எதுவும் செய்வேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நாட்டில் அண்மையில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதல்கள் குறித்து அவர் மேலும் பேசுகையில், “சிறுபான்மையினரைக் காப்பாற்ற நான் எந்த ஒரு நிலைக்கும் செல்வேன். சிறுபான்மையினர் இடையே நிலவும் பாதுகாப்பின்மை உணர்வை முடிவுக்கு கொண்டு வரவும் எதையும் செய்வேன்,” என்று கூறினார். தில்லி, கர்நாடகம், மராட்டியம், அரியானா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. மேற்கு வங்காளத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மும்பை மற்றும் மத்திய பிரதேச மாநிலம் ஜலந்தரில் கிறிஸ்தவ ஆலயம் தாக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் கத்தோலிக்க பள்ளி மற்றும் கதீட்ரல் வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 6 பேரை கைது செய்து உள்ளோம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சிறுபான்மையினரைப் பாதுகாக்க எதுவும் செய்வேன்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

