விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணைகளுக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் நீதிமன்றத்தில் விஜயகாந்த் நாளை மறுநாள் ஆஜராகத் தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். பிரதான் எதிர்க்கட்சியான தேமுதிகவினர், அதிமுகவிற்கு எதிராகவும், ஜெயலலிதாவுக்கு எதிராகவும் என்ன பேசினாலும் அவதூறு வழக்குகள் போடப்பட்டன. விஜயகாந்த் சட்டமன்றப் படிக்கட்டுகள் ஏறியதை விட ஊர் ஊராகப் போய் நீதிமன்றப் படிக்கட்டுகளிலேயே அதிகம் ஏறினார். விஜயகாந்த். செல்லும் இடங்களில் சில நேரம் கலவரங்களும் வெடித்தன. அதுவும் நீதிமன்ற வளாகத்திலேயே. இதற்கு ஆளும் கட்சி வழக்கறிஞர்களே தூண்டுதலாக இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இதற்கு முடிவு கட்டும் விதமாக விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, தேமுதிக எம்எல்ஏக்கள் பார்த்திபன், வெங்கடேஷ், பார்த்தசாரதி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தங்கள் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. விஜயகாந்த் சார்பில் அவதூறு சட்டப் பிரவுக்கு எதிராக மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் திங்கள்கிழமை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், விஜயகாந்த் மீது தமிழக அரசு உள்பட பல்வேறு தரப்பினர் 14 நீதிமன்றங்களில் தொடுத்த அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், பிரேமலதா மற்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்கவும் இடைக்கால தடை விதித்தது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்கில் வரும் புதன்கிழமை ஆஜராவதில் இருந்தும் விஜயகாந்த்துக்கு உச்சநிதிமன்றம் விலக்கு அளித்தது. மேலும், அவதூறு வழக்குகள் குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசு, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories