விவாகரத்து பெற்ற பெண்களை ஏமாற்றி திருமணம்: ரூ.2 கோடி வரை மோசடி செய்த நபர் கைது

சென்னை: விவாகரத்து பெற்ற பெண்களைக் குறிவைத்து, அவர்களிடன் மயக்கும் விதத்தில் பேசி திருமணம் செய்து, அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி வரை ஏமாற்றிய நபரை போலீஸார் கைது செய்தனர். சென்னை, கோவை, குமரியில் இவர் விவகாரத்து பெற்ற பெண்களை இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு வீழ்த்தியுள்ளார் அந்த நபர். சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (36). பொறியாளரான் இவர் அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2006ஆம் ஆண்டு இவருக்கும் மதுரையைச் சேர்ந்த வனிதாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. ஒரு குழந்தை ஊனமுற்றதாக இருந்தது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2010ஆம் ஆண்டு வனிதாவை சீனிவாசன் விவாகரத்து செய்தார். மாற்றுத் திறனாளிக் குழந்தையை தன்னுடன் வைத்துக் கொண்டு வளர்த்து வந்தார். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த அபிநயாவை சீனிவாசன் திருமணம் செய்தார். இருவரும் திருமங்கலத்தில் வசித்து வந்தனர். இதனிடையே அடிக்கடி சீனிவாசன் வெளியூரில் சென்று தங்கினார். இது அபிநயாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. திடீரென வீட்டில் இருந்த பழைய போட்டோக்களை எடுத்து அபிநயா பார்த்த போது சீனிவாசனுடன் மேலும் 2 பெண்கள் திருமணக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் அபிநயா. உடனே இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அபிநயாவின் புகாரின் பேரில், போலீசார் சீனிவாசனைப் பிடித்து விசாரித்தனர். அப்போது கோவையைச் சேர்ந்த டாக்டர் சுமித்ரா, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜெயா பிரின்ஸ் ஆகிய மேலும் 2 பேரையும் ஏமாற்றி திருமணம் செய்திருப்பது தெரிய வந்தது. அவர்களை அந்தந்த ஊரிலேயே வீடு எடுத்து சீனிவாசன் தங்க வைத்துள்ளார். வாரம் 2 முறை அவர்களது வீட்டுக்குச் சென்று சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்டார். அவர்கள் சந்தேகம் அடைந்து கேட்கும்போது வேலை தொடர்பாக வெளியூர் சென்று விட்டதாக சமாளித்து வந்தார். இதனால் சென்னை, கோவை, கன்னியாகுமரி என சீனிவாசன் 3 பெண்களுடன் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இவர்களில், டாக்டர் சுமித்ரா உள்பட 3 பேரும் ஏற்கெனவே விவாகரத்து பெற்றவர்கள். அனைவரையும் திருமண இணையதளம் மூலமே வலை விரித்து வீழ்த்தி உள்ளார் சீனிவாசன். மாற்றுத்திறனாளி மகனுடன் வாழ்ந்து வருவதாக சீனிவாசன் கூறியதால், அவர் நல்லவராக இருக்கலாம் என்று நினைத்து பரிதாபப்பட்டு அவரைத் திருமணம் செய்ததாக ஏமாந்த பெண்கள் கூறியுள்ளனர். சீனிவாசன் திருமணம் ஆனதுமே அபிநயாவின் ரூ.25 லட்சம் பணம், மற்றும் அவரது பெயரில் இருந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். இதே போல் கோவை டாக்டர் சுமித்ராவின் ரூ.90 லட்சம் மதிப்பிலான நிலத்தையும் தனக்கு பத்திரப் பதிவு செய்து கொண்டார். அவர்களது நகைகளையும் வாங்கி வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. கைது செய்யப்பட்ட சீனிவாசன் குறித்து கோவையில் உள்ள டாக்டர் சுமித்ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் சென்னை விரைந்துள்ளார். கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜெயாபிரின்ஸ் வேலை காரணமாக துபாய் சென்றுள்ளார். அவரும் இவரிடம் ஏமாந்திருப்பது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சீனிவாசனிடம் ஏமாந்தது இந்த நான்கு பெண்கள் மட்டும்தானா? அல்லது வேறு யாரேனும் உள்ளனரா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories