சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் மறைவு: மோடி, பிரணாப் இரங்கல்

Published:

குடியரசுத் தலைவர் இரங்கல்: சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் திரு. லீ குவன் யூ மறைவிற்கு குடியரசு தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் டூவிட்டர் வளையதளத்தில் தெரிவித்ததாவது:- சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் திரு. லீ குவன் யூ மறைவிற்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உன்னதமான ஒரு தலைவரின் இழப்பிற்கு ஆசிய நாடு வருத்தம் அடைகிறது என்று குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார். பிரதமர் இரங்கல்: நவீன சிங்கப்பூரின் தந்தை திரு. லீ குவன் யூ மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தொலை நோக்கு பார்வை கொண்ட ஆட்சி நிபுணர், தலைவர்களில் சிங்கமாக திகழ்ந்த திரு. லீ குவன யூவின் வாழ்க்கை அனைவருக்கும் சிறந்த பாடமாக உள்ளது. அவர் மறைவுச் செய்தி எனக்கு வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில், திரு. லீ குவன் யூவின் குடும்பத்தினருடனும் சிங்கப்பூர் மக்களுடனும் இணைந்து நாங்களும் பிராத்தனை செய்கிறோம். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img