சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத… புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு பூமி பூஜை!

parliament-boomi-pooja2
parliament-boomi-pooja2

புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட வேத விற்பன்னர்கள், முறைப்படி வேத கோஷம் முழங்க பூமி பூஜையை நடத்தி வைத்தார்கள்.

டிச.10 வியாழக்கிழமை இன்று காலை, பிரதமர் நரேந்திர மோடி 971 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கான பூமி பூஜையை செய்தார்.

மோடி அரசின் லட்சிய திட்டங்களில் ஒன்றான சென்ட்ரல் விஸ்டா திட்டம், சென்ட்ரல் விஸ்டா அவென்யூ என அழைக்கப்படும் பகுதி, ராஷ்டிரபதி பவன் மற்றும் இந்தியா கேட் இடையேயான பகுதி ஆகியவை அடங்கிய தொகுப்பாக, மறுவடிவமைப்பைக் கொண்டிருந்தது.

new-parliament-model2
new-parliament-model2

இதற்கான பூமி பூஜை இன்று மேற்கொள்ளப் பட்டது. இந்த பூமி பூஜை நிகழ்வு இந்து ஆன்மிக பாரம்பரிய மரபுகளின்படி நிகழ்த்தப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினருக்குமான ஜனநாயகக் கோயிலான நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வின் போது, பல்வேறு மதத்தினரின் வழிபாடுகளும் நடத்த திட்டமிடப்பட்டது.

அதில் ஒன்றாக, சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ சாரதா பீடத்தின் வேத விற்பன்னர்கள் குழு பங்கேற்று, பல்வேறு பூஜைகளை நிகழ்த்தியது. பூமி பூஜைக்கான அஸ்திவாரம் போடும் நிகழ்வின் போது பிரார்த்தனை செய்ய பல்வேறு மதங்களின் ஆன்மிக குருமார்களும் கலந்து கொண்டு பிரார்த்தனைகளைச் செய்தனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்
sringeri-2
sringeri-2

மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியிடம், புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கான பூமி பூஜை விழா ஏற்பாடுகளைச் செய்யுமாறு பிரதமர் மோடி பொறுப்பினை வழங்கினார். மேலும், இது அனைத்து மதத்தினரின் நம்பிக்கைக்கும் உரிய நாட்டின் ஜனநாயகக் கோயில் என்பதால், இந்த பூமி பூஜை விழாவின் போது அனைத்து மதத்தினரின் ஆன்மிக நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கும் வகையில் பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்றும், எனவே அனைத்து மத ஆன்மிக குருமார்களையும் அழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி, பிரல்ஹாத் ஜோஷியிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்திருந்தார்.

ALSO READ: புதிய நாடாளுமன்ற கட்டிடம்: வேத கோஷம் முழங்க… புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்!

அதன்படி அமைச்சர் ஜோஷி, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த மகாஸ்வாமிகளிடம் இது தொடர்பாக கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று, பூமி பூஜைக்காக வேத விற்பன்னர்கள் மற்றும் புரோஹிதர்கள் அடங்கிய குழுவை புதுதில்லிக்கு அனுப்புவதாக சுவாமிகள் உறுதியளித்தார்.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!
sringeri-
sringeri-

பூமி பூஜை விழாவை முன்னிட்டு பூஜைகள் செய்ய முன்னேற்பாடுகளைச் செய்ய ஆறு பேர் அடங்கிய குழு செவ்வாய்க்கிழமை தலைநகரை அடைந்தது. ஆச்சார்ய டி வி சிவகுமார் சர்மாகாரு, கே.எஸ்.லட்சுமி நாராயண சோமயாஜி, கே.எஸ் கணேஷ் சோமயாஜி, நாகராஜ அடிகாரு, ராகவேந்திர பட், ரிஷ்யச்ருங்கா ஆகியோர் வியாழக்கிழமை இன்று ஹிந்து ஆன்மிக மரபுகளின்படி சடங்குகள் மற்றும் பூஜைகளை நடத்தி வைத்தனர்.

இந்த பூமி பூஜை விழாவின் போது சிருங்கேரி புரோஹிதர்கள், குரு பூஜை, கணபதி பூஜை, புண்யாஹவசனம், ஆதிகேஷ பூஜை, அனந்த பூஜை, வராஹ பூஜை, புவனேஸ்வரி பூஜை ஆகியவற்றைச் செய்வித்தனர்.

மேலும், புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் அஸ்திவாரத்தில் பிரதிஷ்டை செய்து வைப்பதற்காக, ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட சங்குஸ்தாபன வஸ்துவும் நவரத்னங்களும் ஸ்ரீ ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் சார்பில் அனுப்பி வைக்கப் பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories