கடவுளின் ஆசிர்வாதத்தால் வெற்றி.. இதன் பெருமை மக்களுக்கே: பிரதமர்!

pm-modi
pm-modi

கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஒரே ஆண்டில் இரு தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து, அனைவரின் அச்சங்களையும் தவறு என இந்தியா நிரூபித்துள்ளது, கொரோனாவுக்கு எதிரான போரில் வென்றதற்கு நாட்டு மக்களே காரணம் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று பேசினார். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டு வந்தது குறித்தும், எடுத்த நடவடிக்கைகள், தடுப்பு முயற்சிகளை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். அவர் பேசியதாவது:

போலியோ, சின்னம்மை போன்ற மிகப்பெரிய அச்சுறுத்தல்களையும், பெருநோய்களையும் இந்தியா சந்தித்திருக்கிறது.

இந்தியா மிக்பெரிய நாடு, மக்கள் அனைவருக்கும் எவ்வாறு தடுப்பூசி கிடைக்கும், இந்தியாவால் தடுப்பூசி கண்டுபிடிக்க முடியுமா என யாருக்கும் தெரியாது.

ஆனால், கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஓர் ஆண்டுக்குள் இந்தியா ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துள்ளது. இதில் 2 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. உலகத்துக்காக தடுப்பூசிகளை இந்தியா தயாரித்து வருகிறது. இது நமது தன்னம்பிக்கையை வளர்த்து வருகிறது.

கொரோனா காலத்தில் நமது நாட்டின் கூட்டாட்சி தத்துவம், கூட்டாட்சி மேலும் வலிமை அடைந்துள்ளது. இந்தியா மருந்து நிறுவனங்களின் மையமாக இருந்து வருகிறது. 150 நாடுகளுக்கு நாம் மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறோம்.

உலகிலேயே மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை இந்தியா நடத்தி வருகிறது. கண்களுக்குத் தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், குடும்ப உறுப்பினர்கள்கூட ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய முடியாத நிலை முதலில் இருந்தது.

இந்த சூழலைப் பார்த்த உலகம், இந்தியா எவ்வாறு கொரோனா பிரச்சினையை சமாளிக்கப்போகிறது என்று அச்சமும், கவலையும் அடைந்தது.

கடவுளின் ஆசிர்வாதத்தால், நாம் கொரோனா வைரஸ் பிரச்சினையை சிறப்பாகக் கையாண்டோம். கொரோனாவுக்கு எதிரானப் போரில் வென்றதன் பலன், பெருமை அனைத்தும் தேசத்தின் மக்களுக்கே சேரும். எந்த தனிநபருக்கும், அரசுக்கும் சேராது.

கோடிக்கணக்கிலான மக்கள் கொரோனாவில் பாதிக்கப்படுவார்கள், லட்சக்கணக்கில் உயிரிழப்பார்கள் என்றெல்லாம் கணிக்கப்பட்டது. ஆனால்,அனைவரின் அச்சங்களையும் இந்தியா தவறு என நிரூபித்துவிட்டது.

இந்தியா உலகிற்கு கொரோனா தடுப்பூசிகளை அனுப்பியதைப் பார்த்து மனிதநேயத்தை உலகம் புகழ்கின்றது. இந்த பெருமை தனிநபருக்கோ, அரசுக்கோ அல்ல, இந்தியாவுக்குத்தான். விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் நாட்டின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இருக்கக்கூடாது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories